Skip to main content

7தமிழர் விடுதலையில் தூங்கிக்கொண்டிருக்கும் ஆளுநரை தட்டி எழுப்பவே போராட்டம் !!

Published on 26/09/2018 | Edited on 26/09/2018

 

 

 

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக 7 தமிழர்கள் விடுதலை செய்ய கோரி   சேப்பாக்கம் விருந்தினர் மளிகை அருகே மாபெரும் போராட்டம் நடைபெற்றது. 


தமிழக அமைச்சரவை 7 பேர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது இந்த தீர்மானத்தை ஏற்று ஆளுநர் உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை  வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது.   


இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். போராட்ட மேடையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேலுமுருகன் பேசுகையில்,


எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா பெயரை சொல்லி செய்த ஒரே நல்ல விஷயம் 7 பேர் விடுதலைக்கான அமைச்சரவை தீர்மானம்தான். ஆளுநருக்கு அனுப்பப்பட்ட அந்த தீர்மானத்தின்படி காலம் தாழ்த்தாமல் அந்த 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும். ஆளுநரே நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை எங்கள் ஜனநாயக உரிமையாதான் கேட்கிறோம். ஆளுநருக்கு அமைச்சரவை தீர்மானம் அனுப்பப்பட்டு பலநாட்கள் ஆகிய நிலையில் இதுவரை அதை நிறைவேற்றாமல் மோடி அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஆளுநர் தூங்காமல் இந்த தீர்மானத்தின் அடிப்படையில் 7 பேரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.



எங்கள் கட்சி தொண்டர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்பட்டு  குண்டர் சட்டம் போன்ற சட்டங்கள் மூலம் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து தொடர்ந்து தமிழக அரசு எங்களை வஞ்சித்து வருகிறது. அதேபோல் போராட்டம் செய்யவும் அனுமதி தராமல் வைக்கும் நிலைப்பாட்டை கைவிடவேண்டும். கட்சி தொண்டர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை தகர்த்து தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளோம் எனக்கூறினார்.


மேலும் நீதிமன்றத்தை அவதூறாக பேசி  9 வழக்கு போடப்பட்டு, நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு போலீசார் தனிப்படையும் தேடிவரும் நிலையில் எந்த அடிப்படையில் ஆளுநரை எச்.ராஜா சந்தித்தார் என கேள்வி எழுப்பினார்.


தமிழக வாழ்வுரிமை கட்சி 8 வழிச்சாலை, சுங்கச்சாவடி, டாஸ்மாக் போன்ற மக்களின் வாழ்வாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் செயல்களை எதிர்ப்பதிலேயே தொடர்ந்து இருக்கும். அதற்கான போராட்டங்களை எப்போதும் முன்னெடுக்கும் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'ஆளுநருக்கு என் மீது பாசம் அதிகம்'-அமைச்சர் பொன்முடி பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
 'Governor has a lot of affection for me' - Minister Ponmudi's speech

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு ஆளுநர் அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் விழுப்புரம் கூட்டத்தில் பொன்முடி பேசுகையில், 'ஆளுநருக்கு என் மேல் ரொம்ப பிடிப்பு, பாசம் அதிகம். ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் எல்லாம் சொன்னதைப்போல நான் கொஞ்சம் சமத்துவக் கொள்கை, சமதர்மக் கொள்கை இதெல்லாம் கொஞ்சம் பேசுற ஆளு. மத்த அமைச்சர்களை விட நான் தான் அவரிடம் நேரடியாக எல்லாவற்றிலும் தொடர்புடையவன். அதனால் என் மேல அவருக்கு பாசம், பற்று, பிரியம் எல்லாம் இருந்தது. உச்சநீதிமன்றத்தை தீர்ப்பு வந்ததற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக என்னை டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதற்கு பிறகு மார்ச் மாதத்தில் உத்தரவு எல்லாம் வந்த பிறகு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அவர் உடனடியாக பார்த்து நான் அமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று சொல்லி இருந்தால் சரி. அதைதான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செய்ய வேண்டும்.

உண்மையான நிர்வாகத்தை நடத்துபவர் முதல்வர். ஆளுநர் பெயருக்கு நிர்வாகத்தை நடத்துபவர். கவர்னர் என்ன ஓட்டு போட்டா வந்தார். ஒரு நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மாநில அரசாங்கம் எதை சொல்லுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் அவருடைய பொறுப்பு. அதுதான் அரசியலமைப்பு சட்டம் சொல்லுவது. இன்றுகூட கேரளாவில் ஏழு அரசியலமைப்பு சட்டங்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் இருக்கிறார் என்று சொல்லி கேரளாவினுடைய முதல்வர் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார் என்று சொன்னால் இந்த ஆளுநர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் ஆட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்ற இந்த ஒன்றிய அரசை நீங்கள் தூக்கி எறிய வேண்டுமா வேண்டாமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.