Skip to main content

தேர்தல் அதிகாரி வராததால் வேட்பாளர்கள் கதவுகளை பூட்டிக் கொண்டு உள்ளிருப்பு போராட்டம்

Published on 25/04/2018 | Edited on 25/04/2018
Milk Producers Cooperative Association elections

    
கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்பு மனு பரிசீலனை, மற்றும் வேட்பு மனு வாபஸ் பெறவும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடவும் தேர்தல் நடத்தும் அதிகாரி வராததால் கூட்டுறவு சங்க அலுவலக கதவுகளை பூட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

    தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கு தலைவர் மற்றும் இயக்குநர்கள் தேர்வு செய்வதற்காக பல கட்டமாக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு நடந்து வந்தது. முதல் 2 கட்ட தேர்தல்கள் நடந்த போது தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் அனைவருக்கும் பொதுவாக நடந்து கொள்ளாமல் ஒருதலைபட்சமாக செயல்பட்டு ஒரு தரப்பினர் வேட்பு மனுக்களை மட்டும் ஏற்றுக் கொண்டதாக இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதாக ஒவ்வொரு ஊரிலும் பிரச்சனைகள், போராட்டங்கள் நடந்தது. இந்த நிலையில் கடந்த 9 ந் தேதி நீதிமன்றம் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்த தற்காலிக தடைவிதித்தது. அதனால் 9 ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் நீதிமன்ற உத்தரவுப்படி 23 ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூட்டுறவு சங்கங்களுக்கு வரவில்லை.


 

பூட்டிக் கொண்டு காத்திருந்தனர் :
 

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு கடந்த 9 ந் தேதி சுமார் 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களின் பரிசீலனை 23 ந் தேதி நடத்தப்படும் என்று காத்திருந்தனர். அதிகாரி வரவில்லை. தொடர்ந்து செவ்வாய் கிழமை வாபஸ் பெறப்பவும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடவும் அதிகாரி வருவார் என்று காலை முதல் காத்திருந்தனர். மாலை வரை தேர்தல் நடத்தும் அதிகாரி வரவில்லை. அதனால் திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர்  ஞானஇளங்கோவன் தலைமையில் தி.மு.க நகரச் செயலாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் தமிழ்மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னால் நகரச் செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் பல கட்சி நிர்வாகிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Milk Producers Cooperative Association elections

    தொடர்ந்து கூட்டுறவு சங்க மாவட்ட அதிகாரிகளிடம் சங்க செயலாளர் கணேசன் பேசிவிட்டு 3 ந் தேதி வரை எந்த பட்டியலும் வெளியிடமாட்டாது என்று அதிகாரிகள் கூறுவதாக போராட்டக்காரர்களிடம் கூறினார். ஆனால் அவற்றை எழுதிக் கொடுக்கும்படி கேட்டனர். சங்க செயலாளர் எழுதிக் கொடுக்க மறுத்ததால் அலுவல கதவுகளை உள்ளே பூட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டம் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

பால் வண்டிகளை நிறுத்தி போராட்டம் : 
 

    மாலை 6.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றம் சொன்ன பிறகும் ஒருதலை பட்சமாக தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில் இரவில் வேட்பாளர் பட்டியலை ஒட்டிவிட்டு செல்ல நினைத்தால் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம் பால் வாகனத்தை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தும் போராட்டமும் நடத்துவோம். இந்த போராட்டங்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 6 ஆயிரம் வெள்ள நிவாரணம்; கூட்டுறவுத் துறை சார்பில் குழு அமைப்பு

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
6 thousand flood relief; Committee Organization on behalf of Co-operative Sector

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 3 வட்டங்களில் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

6 thousand flood relief; Committee Organization on behalf of Co-operative Sector

இந்நிலையில் சென்னை வடக்கு மண்டலத்தில் ரூ. 6 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க கூட்டுறவுத் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 590 ரேசன் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கூடுதல் பணியாளர்கள், வருவாய்த்துறை சார்பில் 2 பேர் என 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வெள்ள நிவாரணம் தருவது தொடர்பாக இந்த குழுவில் இடம்பெற்றுள்ள கூட்டுறவு பணியாளர்களுக்கு சென்னையில் (14/12/2023) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலகங்களில் சரக கூட்டுறவு சார் பதிவாளர்களால் பயிற்சி தரப்பட உள்ளது. 

Next Story

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் லிட்டர் பால் வழங்கிய நிறுவனம்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
 company provided 5000 liters of milk to the people affected by the storm

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டது. காற்றின் வேகம் குறைவு என்றாலும், கடும் மழை சென்னை வாழ் மக்களை நிலைகுழையச் செய்துவிட்டது. நகரில் ஆள் உயரத்திற்கு தண்ணீர் சென்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடிசை வீடுகளிலும், மாடிவீட்டு கீழ்தளங்களிலும் குடியிருந்தவர்களின் வீட்டில் உள்ள அத்தனை உடமைகளும் நாசமானது. இதனை உணர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னைவாழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள அனவயல் பாரத் பால் நிறுவனம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைவாழ் மக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பாலுடன், பாரத் பால் நிறுவன இயக்குநர்கள், ஊழியர்கள் சென்னை சென்று பெரும்பாக்கம் பகுதி மக்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில், பொதுமக்களுக்கு பால் பாக்கெட் வழங்கியதுடன் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டனர்.

5 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பால் வழங்கிய பாரத்பால் நிறுவனத்தினர் நம்மிடம், புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் எப்படி எல்லாம் அவதிப்படுவார்கள், கஷ்டப்படுவார்கள் என்பதை 2018 கஜா புயலின் தாக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டு உணர்ந்தவர்கள் நாங்கள். பல நாட்கள் குடிதண்ணீர், மின்சாரம் கூட கிடைக்காமல் அவதிப்பட்டோம். ஆனால் சென்னையில் அதெல்லாம் சில நாட்களிலேயே கிடைத்துவிட்டது. எங்கள் மக்களுக்கு எங்கிருந்தெல்லாமோ நிவாரணம் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆனால் மக்கள் உடனே வேலைக்கு போகவோ அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவோ முடியாத நிலையில் இருப்பார்கள் என்பதால், எங்கள் பாரத் பால் நிறுவனம் சார்பில் 5 லட்சம் லிட்டர் பால் கொண்டு வந்து அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் பொதுமக்களிடம் நேரடியாக வழங்கி இருக்கிறோம் என்றனர்.