Published on 08/10/2018 | Edited on 08/10/2018
![kiran rao](http://image.nakkheeran.in/cdn/farfuture/xx0sVv51311m-erq-e2tmF5hqcgRsfcekx9w_cf-crE/1539012270/sites/default/files/inline-images/kiran-rao1.jpg)
தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் வீடு, பண்ணைவீடு ஆகியவற்றில் கடந்த வாரங்களில் சிலைக்கடத்தல் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல சாமி சிலைகள், தூண்கள் ஆகியவை கிடத்தன. அதைத்தொடர்ந்து அவர் தோழியான கிரண் ராவ் வீட்டில் சோதனை நடந்தது. அங்கும் பல சிலைகளும், தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது கிரண்ராவின் நிறுவன மேலாளர் தயாநிதி உட்பட 7 பேருக்கு சிலைக்கடத்தல் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.