Skip to main content

மயிலாடுதுறையில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டி! 

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

State level Kabaddi competition held in Mayiladuthurai!

 

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக மாநில அளவிலான கபாடி போட்டியை நடத்தியுள்ளனர் திமுகவினர்.

 

மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் இளையபெருமாள் தலைமையில் நடந்த இந்தப் போட்டியைத் திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ., மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார், சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், அரசு வழக்கறிஞர் டாக்டர் சேயோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, துவங்கிவைத்து, போட்டியைக் கண்டு ரசித்தனர். போட்டியைக் காண பல கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

 

மூன்றுநாள் போட்டியாக நடந்த இந்தப் போட்டிக்கு முதல் பரிசு முப்பதாயிரம், மற்றும் ஐம்பதாயிரம் மதிப்புள்ள கேடயமும் வழங்கி கவுரவித்தனர். அந்தப் பரிசுகளைத் திமுக மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான இளையபெருமாள் வழங்கினார். பிரம்மாண்டமான போட்டியைக் கவுன்சிலரும் விளையாட்டு வீரரும், பயிற்சியாளருமான கராத்தே ஜெயக்குமார், கேசிங்கன் ஊராட்சிமன்றத் தலைவர் ரமேஷ், மணல்மேடு திமுக இளைஞரணியைச் சேர்ந்த ஶ்ரீநாத் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து நடத்தி முடித்துள்ளனர். 

 

State level Kabaddi competition held in Mayiladuthurai!

 

தமிழ் மண்ணில் தமிழர்களால்ள்உருவாக்கப்பட்ட வீர விளையாட்டுகளுள் ஒன்றுதான் கபாடி. இப்போது உலக நாடுகளில் பரவலாக விளையாடப்பட்டாலும் உருவான தமிழ்நாட்டில் விளிம்புநிலை மக்களின் விளையாட்டாகவே சுருங்கிவிட்டது. கபாடி போன்ற பண்பாடு, கலாச்சாரம் கலந்த வீர விளையாட்டுக்களை உயிர்ப்பிக்கும் விதமாகத்தான் தற்போது அழிவின் விளிம்பில் இருந்த சிலம்பத்தை மீட்டெடுக்கும்விதமாக தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு செய்திருக்கிறார்.

 

கபாடி, சிலம்பம், கராத்தே என பன்முக வீரரும் பயிற்சியாளருமான மணல்மேட்டைச் சேர்ந்த சென்சாய் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேட்டோம், "கை-பிடி என்கிற வார்த்தை மறுவியே கபடியாக மாறியுள்ளதாக கருதுகிறோம். சுமார் 4000 வருடங்களுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க செய்யப்படும் பயிற்சிதான் இந்தக் கபடி விளையாட்டு. கபாடி பாடிவரும் ரெய்டர் என்கிற ஒற்றை ஆளைக் காளையாக கருதி, அவரை எதிரணியில் இருக்கும் ஏழு வீரர்களும் அடக்குவர். பின்னர் இந்தப் பயிற்சி, வீர விளையாட்டாக உருவெடுத்து இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் முழுவதும் பரவியிருக்கிறது. புத்தர் உள்ளிட்ட பல இளவரசர்கள் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்காக சுயம்வரங்களில் இந்த விளையாட்டை விளையாடியதாகவே கூறுகின்றனர். 

 

ஆனால் தமிழனின் அடையாளமான சிலம்பம், கபாடி போன்ற வீரவிளையாட்டுகள் அழிந்துவரும் நிலைக்குச் சென்றுவிட்டது. அதோடு விளிம்புநிலையில் வாழும் மக்கள் மட்டுமே கொண்டாடும், விளையாடும் விளையாட்டுபோலவே மாற்றிவிட்டனர். இதற்கு கிரிக்கெட் விளையாட்டும் ஒரு காரணமாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மேல்தட்டு மக்களும், கபாடி, சிலம்பம் போன்ற விளையாட்டுகளை அடிதட்டு மக்களுக்கானதுமாகவே மாற்றிவிட்டனர். பொங்கல் விழாவின்போது ஒவ்வொரு கிராமங்களிலும் கபாடி, சிலம்ப போட்டிகள் நடக்கும். ஆனால், சமீப காலமாக காவல்துறையினரின் அனுமதியில்லாமல் முடங்கிவிட்டது. இதுவரை ஒவ்வொரு ஆண்டும் தளபதியார் பிறந்தநாளில் கபாடி போட்டி நடத்தினோம், இந்த ஆண்டு முதல் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளிலும் விழாவாக கபாடி போட்டி மிக விமரிசையாக நடத்தி முடித்துள்ளோம். மதுரை, சென்னை, திருச்சி, சேலம் என பல மாவட்டங்களில் இருந்தும் வீரர்கள் வந்து கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்று சென்றனர். இது எங்களுக்கு மிகப்பெரிய மனநிறைவைக் கொடுத்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் போட்டியை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

 

State level Kabaddi competition held in Mayiladuthurai!

 

அமெச்சூர் கபடி கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், திமுக பிரமுகரும், பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிவருபவருமான மயிலாடுதுறை ரஜினியிடம் கேட்டோம், "1921இல் கபடி விளையாட்டிற்கான கமிட்டி மஹாராஷ்ட்ராவில் உருவாக்கப்பட்டது. 1950இல் அனைத்திந்திய கபடி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. பின்பு 1972இல் இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பாக மாற்றப்பட்டது. 1980இல் முதன்முதலாக ஆசிய கபடி போட்டி நடத்தப்பட்டு, இந்தியா சாம்பியன் ஆனது. முதல் கபடி உலக கோப்பை 2004இல் நடைபெற்றது. இந்தியா முதல் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இதுவரை இந்தியா 8 முறை உலக சாம்பியன் ஆகியுள்ளது.

 

கபடியில் இந்திய பெண்களும் சளைத்தவர்களல்ல என்பதற்குச் சான்றாக 2005இல் மகளிருக்கான ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்று அசத்தினர். 2012இல் நடைபெற்ற மகளிருக்கான முதல் கபடி உலகக் கோப்பையை வென்று அசத்தினர். இதுவரை மூன்றுமுறை உலக சாம்பியன் வென்றுள்ளனர் நம் இந்திய சகோதரிகள். அனைத்து வகை கபடி போட்டிகளிலும் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இன்னும் மெருகேற்றும் விதமாக தமிழக முதல்வரின் விளையாட்டு குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் அமைந்துள்ளன. இதுபோல் ஒவ்வொரு பகுதிகளிலும் கபடி, சிலம்ப போட்டிகள் நடத்தபட வேண்டும். சிறுவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.