Skip to main content

கடையடைப்பு போராட்டத்தில் பொன்முடி உரை!!

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

திருக்கோயிலூரில் நடைபெற்ற திருக்கோயிலூர்  பேரூராட்சி  மற்றும் திருக்கோயிலூர் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளை  புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்காமல்  விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டுமென அனைத்து கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் முழுக்கடையப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

speech in protest


அவர் "மாவட்ட பிரிப்பு என்பது மக்களுக்காகவும் அவர்களின் சவுகரியத்துக்காகவும் மேற்கொள்ளப்படும். மக்களின் கோரிக்கைகளை ஏற்று திருக்கோவிலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்