Skip to main content

Exclusive: வஞ்சம் தீர்க்க, இளைஞனை நையப்புடைத்த எஸ்.ஐ..! இடமாற்றம் செய்த எஸ்.பி..!

Published on 13/09/2018 | Edited on 13/09/2018

 

fightt sm


" கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நடந்த பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு, இளைஞன் ஒருவனை நையப்புடைத்து வஞ்சம் தீர்த்துக்கொண்ட காவல்துறை எஸ்.ஐ.யை இடமாற்றம் செய்துள்ளார் மாவட்ட எஸ்.பி.யான முரளி ராம்பா.

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட மேல்மாந்தை பெத்தானாட்சியம்மன் கோவில். கடந்த மார்ச் மாதம் இங்கு பூக்குழி திருவிழா நடைபெற, அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த திருவிழாவின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மீது கதிரவன் என்ற இளைஞர் மோதிவிட, " எப்படி..? போலீஸார் மோதலாம்.." என போலீஸார் லத்தியை உயர்த்திய வேளையில், அங்கிருந்த பெரியவர்கள் தலையிட்டு, இளைஞர்களை கண்டித்ததுடன், போலீஸாரிடம் மன்னிப்புக் கேட்டும் இளைஞர்களை ஓரமாக சென்று ஆடும்படி கேட்டு கொண்டதற்கிணங்க, நிலைமை அப்போது சீரானது.
 

fightt sm
                                              இளைஞர் கதிரவன்


எனினும், ஆட்டம் போட்ட இளைஞர் கதிரவனை படம் எடுத்து வைத்திருந்த போலீஸார், இப்போது, தங்களது வேலையை காட்டி உள்ளனர். அதாவது, கடந்த வாரம் அதே பெத்தனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மாத திருவிழா நடைபெற்றது. பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல் முருகன், இந்த முறை கும்மிப்பாட்டுக்கு நடனமாடிய இளைஞர் கதிரவனுடன் தகராறு செய்ததோடு, அவரை மட்டும் விசாரணை என்ற பெயரில் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றிருக்கிறார். காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்த உதவி ஆய்வாளர், கதிரவனின் சாதியை சொல்லியும் இழிவாக திட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த கதிரவன், "தம்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியம் நிறைவேறாமல் போய்விடுமோ..? என்ற அச்சத்தில் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

fightt sm
                                                   எஸ்.பி.முரளி ராம்பா


இதுகுறித்து நாம் விசாரித்தபோது, தென் மாவட்டங்களில் குறிப்பாக விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், குறிப்பிட்ட இரு சமூகத்திற்கு எப்பவும் ஆகாது. அதே மாதிரி தான் இந்த மாவட்டங்களில் பணியாற்றும் போலீஸாருக்கும் இடையேயும் சாதிய பாகுபாடு உண்டு. இப்போது தாக்குதலுக்கு ஆளான இளைஞர் பட்டியல் சாதியை சேர்ந்தவர். அவரை அடித்து உதைத்த காவல் உதவி ஆய்வாளர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், மீண்டும் கொடியன்குளம் போன்ற சாதி கலவரத்திற்கு வழி வகுத்துவிடுமோ..? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பிரச்சனைக்கு ஆளான உதவி ஆய்வாளர் செந்தில்வேல் முருகனை ஆயுதப்படைக்கு மாற்றி இடமாற்றம் செய்துள்ளார் மாவட்ட எஸ்.பி.முரளி ராம்பா. எனினும் பிரச்சனை தற்பொழுது பூதகரமாகி வருவதால் பரப்பரப்பாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.