Skip to main content

பட்டதாரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை;உரிய சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும் கைது செய்ய மறுக்கும் போலீசார்; உறவினர்கள் போராட்டம்!!

Published on 20/10/2018 | Edited on 20/10/2018

கன்னியாகுமரியில் பட்டதாரி இளம்பெண், பழுதாகிய தொலைக்காட்சியை சரி செய்ய வந்த பக்கத்து வீட்டு நபரால் பாலியல் கொடுமை செய்யப்பட்டு பதிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

kanniyakumari

 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரை சேர்ந்த 22 வயதான எம்.ஏ பட்டதாரி மாணவி பிபிஷா. இவர் கடந்த 11-ஆம் தேதி வீட்டில் தொலைக்காட்சி பழுதாகிவிட்டதாக அதை சரி செய்ய பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் இரு குழந்தைகளுக்கு தந்தையான ராஜேஷ் என்பவரை அழைத்துள்ளார். தொலைக்காட்சியை பழுதுபார்க்க ஆளை கூட்டிவருவதாக கூறிய ராஜேஷ் சிறிதுநேரம் கழித்து சரி செய்ய யாரும் கிடைக்கவில்லை நானே தொலைக்காட்சியை பழுதுபார்க்கிறேன் என கூறி வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது இளம்பெண் பிபிஷாவிடம் ராஜேஷ் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

 

kanniyakumari

 

அதன்பின் வீட்டிற்கு சென்ற ராஜேஷ் திரும்பவும் பிபிஷா வீட்டின் வாயிலுக்கு சென்று அவரை வெளியே அழைத்து கொலைமிரட்டல் விட்டு சென்றுள்ளார். அதனை அடுத்து சில மணி நேரத்திலேயே இளம்பெண் பிபிஷா வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். பின்னர் அருகிலிருந்த பொதுமக்கள் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து அவரை மீட்டனர். ஆனால் 80 சதவிகித தீக்காயத்துடன் மீட்கப்பட்ட பிபிஷா சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். 

 

kanniyakumari

 

இந்த சமபவத்தில் ராஜேஷ் வீட்டுக்கு வந்தது, பாலியல் தொல்லை கொடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் மீட்டது என முழு சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களாக கையிலிருந்தும் போலீசார் ராஜேஷை கைது செய்யாமல் இருப்பதை கண்டித்து பிபிஷாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமபந்தப்பட்ட அதிகாரிகளும், போலீசாரும் கூறியதன்பின் பிபிஷா உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

 

kanniyakumari

 

வீடியோ ஆதாரங்கள் இருந்தும் தகுந்த நடவடிக்கை எடுக்காத இந்த பாலியல் குற்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.