Published on 24/02/2019 | Edited on 24/02/2019


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட 1200 கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது.
கொடைக்கானலில் கட்டப்பட்ட நான்காயிரம் கட்டிடங்கள் வரம்பு மீறி கட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இரண்டாம் கட்டமாக 1200 கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி நாளை முதல் தொடங்க இருப்பதாக நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிக வளாகங்கள் பலவற்றில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.