Skip to main content

அனுமதி இல்லாத டாஸ்மாக் பார்களுக்கு சீல்: பெட்டிக்கடை உள்ளிட்ட இடங்களில் 510 பாட்டில்கள் பறிமுதல்

Published on 25/04/2018 | Edited on 25/04/2018
tasmac


புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 110 டாஸ்மாக் கடைகளில் 40 க்கும் குறைவான பார்களுக்கு மட்டுதே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அனுமதி இன்றி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி பார்கள் இயங்கி வருகிறது. அது மட்டுமின்றி பெட்டிக்கடைகளில் கூட மது விற்பனை பலமாக நடந்து வருகிறது. இவற்றை கவணிக்க வேண்டிய துறை அதிகாரிகள் மாதம் ஒரு முறை வந்து அந்த அனுமதி இன்றி மது விற்பனை செய்யும் நபர்களிடம் ரகசியமாக சந்திப்பு நடத்திவிட்டு செல்கின்றனர். 
 

புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் இதே போல அனுமதி இன்றி பார்கள் இயங்குவதை அறிந்த சார் ஆட்சியர் கே்.எம்.சரயு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தி சீல் வைத்தார். ஆனால் அதன் பிறகும் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. 
 

இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை நகரில் டாஸ்மாக் மேலாளர், கலால் அதிகாரி மற்றும் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் வீரமணி உள்ளிட்ட குழுவினர் நடத்திய சோதனையில் அனுமதி இன்றி நடத்தப்பட்டு வந்த 2 பார்களை பூட்டி சீல் வைத்தனர். அனுமதி இன்றி மது விற்றதாக 5 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த  ரூ.45 பணம் மற்றும் 510 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 
 

இதே போல மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தினால் மேலும் பல ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்கின்றனர் பொதுமக்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.