Skip to main content

"நீட்- மாணவர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published on 12/09/2021 | Edited on 12/09/2021

 

salem neet student incident chief minister mkstalin statement



நாடு முழுவதும் இன்று (12/09/2021) பிற்பகல் 02.00 மணிக்கு நீட் நுழைவுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அச்சம் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவர் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். 

 

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12/09/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தனுஷ் தற்கொலை செய்தது அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது. இரண்டு முறை தேர்வெழுதியும் தேர்ச்சிப் பெற முடியாத அளவுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் நம்பிக்கை நட்சத்திரங்களின் தற்கொலைக்கு காரணமாக அமைகிறது. நீட் மோசடிகளும், மாணவர்களின் தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை. நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நாளை சட்டப்பேரவையில் நிறைவேறும். நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும் வரை நமது சட்ட ரீதியான போராட்டம் தொடரும். மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சிறந்த எதிர்காலத்தை அமைத்து தரும் பொறுப்பு, கடமை அரசுக்கு இருக்கிறது; மாணவர்கள் மனம் தளர வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

இதனிடையே, கூழையூரில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு அ.தி.மு.க. இணை  ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், மாணவரின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.