Skip to main content

ரிசார்ட்டில் எஸ்.எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

Published on 14/08/2022 | Edited on 14/08/2022

 

resorts ssi police incident police investigation

கடந்த ஆகஸ்ட் 11- ஆம் தேதியன்று தென்காசி மாவட்டத்தின் குற்றாலம் பகுதி பழைய குற்றாலத்திலிருக்கும் ரிசார்ட் ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், அவரின் பாதுகாப்பு அதிகாரியான திருத்தணியைச் சேர்ந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டரான பார்த்திபன் மற்றும் மேத்யூ (வயது 60) ஆகியோர் தங்கியுள்ளனர். நீதிபதி வேறு ஒரு அறையில் தங்க, அங்குள்ள கெஸ்ட் ஹவுசில் எஸ்.எஸ்.ஐ. பார்த்திபனும் மேத்யூவும் தங்கியிருக்கின்றனர். பார்த்திபன் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர்.

 

நேற்று முன்தினம் (12/08/2022) இரவு எஸ்.எஸ்.ஐ. பார்த்திபனும், மேத்யூவும் பேசிக் கொண்டிருந்துவிட்டு பின்பு தூங்கச் சென்றனர். காலையில் மேத்யூ எழுந்தபோது பார்த்திபனைக் காணவில்லை. அந்தப் பகுதி வளாகத்தில் தேடிய மேத்யூ, பின்னர் அறையிலுள்ள பாத்ரூம் கதவைத் திறக்க முயன்றார். அது திறக்கவில்லை. சந்தேகப்பட்ட மேத்யூ பலமாகக் கதவைத் திறந்தபோது அங்கு கைத்துப்பாக்கியுடன் ரத்த வெள்ளத்தில் பார்த்திபன் இறந்து கிடந்தது கண்டு பதறியவர், விடுதி பொறுப்பாளர் மற்றும் போலீசாருக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்.

 

குற்றாலம் இன்ஸ்பெக்டர் ஜோசப் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். எஸ்.எஸ்.ஐ. பார்த்திபன் கைத்துப்பாக்கியால் இடது மார்பில் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்ததுடன் சத்தம் வெளியே கேட்காமலிருப்பதற்காக கதவைப் பூட்டிக் கொண்டிதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

 

பின்னர் எஸ்.எஸ்.ஐ. பார்த்திபனின் உடலைப் பிரதேப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த எஸ்.பி.கிருஷ்ணராஜ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

 

முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை காரணமாக எஸ்.எஸ்.ஐ. பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் எஸ்.பி.கிருஷ்ணராஜ்.

 

தற்கொலை செய்துகொண்ட எஸ்.எஸ்.ஐ. பார்த்திபனுக்கு தீபா (வயது 45) என்ற மனைவியும் யுவராஜ் (வயது 17) என்ற மகன் ஹெசிக்கா (வயது 12) என்ற மகளும் உள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள்; விடுதிக்குள் புகுந்து தாக்கிய கும்பல்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
The gang that broke into the hostel for islamic students engaged in prayer

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், குஜராத் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாதம் ரம்ஜான் மாதம் என்பதால், உலகில் உள்ள பல இஸ்லாமியர்களும் மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தை சுற்றி எந்த மசூதியும் இல்லாத காரணத்தினால், விடுதியில் தங்கி இருக்கும் இஸ்லாமியர் சமூகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள், விடுதியில் ஓர் இடத்தில் கூடி தொழுகை செய்து வருகின்றனர். 

அந்த வகையில், கடந்த 16ஆம் தேதி இரவு இஸ்லாம் வகுப்பைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் விடுதியில் தொழுகை நடத்தினர். அப்போது, அங்கு வந்த சுமார் 25 பேர் அடங்கிய கும்பல், தொழுகை நடத்தி கொண்டிருந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. 

மேலும், வெளிநாட்டு மாணவர்களை நோக்கி, 25 பேர் கொண்ட கும்பல் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சு தாக்குதலில், வெளிநாட்டு மாணவர்கள் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், பல்கலைக்கழக விடுதிக்குள் வருவதற்குள், அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டது. 

இதனையடுத்து, காயமடைந்த வெளிநாட்டு மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 25 பேர் கொண்ட கும்பல், விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.