Skip to main content

இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலில் நகைகளும் இல்லை, விக்கிரங்களும் இல்லை.! ஆட்டையப் போட்டது யார்..?

Published on 13/08/2018 | Edited on 13/08/2018
rameswaram-temple


வடக்கே காசி என்றால் தெற்கே இராமேஸ்வரம். இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றானதும், சக்தி பீடங்களில் ஒன்றானது ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில். புராணக் காலத்தோடு தொடர்புடைய இந்த கோவிலுக்கு நேர்த்திக்கடனாக தங்களுக்கு கிடைத்த அரிய, தொன்மை மிக்க பொருட்களை சுவாமிக்கு வழங்கி கௌரவித்தது மன்னர்கள், ஜமீன்தார்கள் உட்பட பல ஆயிரம் பக்தகோடிகள். இக்கோவிலுக்கு சொந்தமான நகைகளும், சிலைகளும் என்னென்ன..? எண்ணிக்கை..? எடை..? உள்ளிட்ட விபரங்களைக் கேட்டு ஆர்.டி.ஐ-ல் விபரம் கேட்க அதில் பாதிக்கு மேல் பலவற்றைக் காணவில்லை என தெரியவர களேபரமடைந்துள்ளனர் பக்தர்கள்.
 

rameswaram-temple


"கோவிலினைப் பொறுத்தவரை நகைகள், சிலைகள், வாகனங்கள் மற்றும் சுவாமிப் பொருட்களுக்கென தனித்தனியாக இரண்டு கணக்குப் புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வரும். முதல் கணக்குப் புத்தகத்தின் அடிப்படையிலே, இரண்டாவது புத்தகம் இருக்கும். அதற்கு லெட்ஜர் 29 எனப் பெயர். 1972ம் ஆண்டு நடந்த தனிக்கையின் போது 361 விதமான நகைகள் இருந்ததாகவும், 1995ம் நடந்த இரண்டாம் தனிக்கையின் போது அதே எண்ணிக்கையில் பாதிக்கு மேல் மாயமாகி 133 விதமான நகைகள் மட்டுமே இருந்துள்ளதாக ஆவணம் தெரிவிக்கின்றது.
 

rameswaram-temple


இதில் சுடர் சூடித்தந்த கனிகதுறை, கிளிப்பதக்கம், தங்க சங்கிலி கோர்க்கப்பட்ட கிளிப்பதக்கம், தாலிக்கோர்வை பதக்கம், முத்துசூட்டிய பதக்கம், இரத்தின பதக்கம், அர்த்த சந்திர பதக்கம், வைர அட்டியல், சிவப்புக்கல் அட்டியல், 5 வடம் யக்ரை பவிதம், இரட்டைச்சரடு, புல்லக்கு, வெத்தலை சரப்புள்ளியில் கோர்த்த பதக்கம், இருதலை கிளிப்பதக்கம், இரத்தினங்கள் இழைத்த வைரசுட்டி, இரத்தினம் இழைத்த கிளி மாலை, 385 சிகப்புக்கற்கள் உள்ளிட்ட தொன்மை மிக்க நகைகள் மாயமாகியதாகவும், இது போல் லெட்சுமணன் நின்றிருக்க சீதையுடன் ராமர் யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஐம்பொன் சிலை, மரகத பச்சை அம்பாள் சிலைகள், சிவலிங்க ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 162 சிலைகள் மற்றும் விக்கிரங்களும் காணாமல் போய்விட்டதாக கூறுகிறது ஆர்.டி.ஐ.தகவல்.
 

Yoga Ramar Silai ss


பக்தர்களோ, "இங்குள்ள அனைத்துப் பொருட்களும், நகைகளும் சில சொற்ப ஆயிரங்களுக்கு வெளியில் போவது போல், அதிகாரிகளின் துணைக்கொண்டு அரசியல்வாதிகள் இந்த நகைகளையும், சிலைகளையும் கடத்தி விற்றிருக்கலாம். மாயமான அத்தனையும் மீட்க வேண்டியது அரசின் கடமை." என்கின்றனர்.

நடவடிக்கை எடுக்குமா அரசு..?

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.