Skip to main content

'ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்வு'- தெற்கு ரயில்வே அறிவிப்பு! 

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

'Rail platform ticket fare hike'- Southern Railway Notice!

 

தெற்கு ரயில்வே இன்று (29/09/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விழாக் காலங்களில் கூட்டத்தைத் தவிர்க்க, சென்னை கோட்டத்திற்குட்பட்ட டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் உள்ள ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூபாய் 10- லிருந்து ரூபாய் 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

 

இந்த கட்டண உயர்வானது வரும் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேவின் இத்தகைய அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்