Skip to main content

தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அஞ்சல் ஊழியர்கள் நேற்று நடத்திய அடையாள வேலை நிறுத்தத்தினால் அஞ்சலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. 

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,  ஊரக அஞ்சல் ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட குழுவின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஊரக அஞ்சல் ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட சாதாரண பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும், வாரத்திற்கு 5 நாட்கள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதுமுள்ள அஞ்சல்துறை ஊழியர்கள் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தனர். 

முக்கிய சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததால் சென்னையில் உள்ள பெரும்பான்மையான அஞ்சலகங்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆட்கள் வேலைக்கு வந்துள்ளனர். அதிலும் பூக்கடை, எத்திராஜ் சாலை  உட்பட பல அஞ்சலகங்களில் ஒருவர் கூட வேலைக்கு வராததால் அஞ்சலக வாயில் பூட்டப்பட்டிருந்தது. இதனால் கடிதங்கள், பார்சல்கள் சேகரிப்பு, பட்டுவாடா செய்வது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. 

சார்ந்த செய்திகள்