Skip to main content

செயின் பறிப்பில் ஈடுபட்டவரை திறமையாக கைது செய்த காவல்துறையினர்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

The police who effectively arrested the person involved in the chain robbery

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உட்கோட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள செங்கனாங்கொல்லை கிராமத்தில் கடந்த 23-09-21 அன்று இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு வழக்கு சம்மந்தமாக திருக்கோவிலூரர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கை கண்டுபிடிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவுபடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் இளவழகி தலைமையில், உதவி ஆய்வாளர் சிவசந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டனர்.

 

பின்னர் சம்பவ இடத்திலிருந்த 30க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பழைய குற்றவாளிகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் புதுவை மாநிலம் வில்லியனூர் அருகில் உள்ள தனத்துமேட்டைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரது மகன் விஜி (25)  என்பது தெரியவந்தது. மேற்படி நபரை பிடித்து விசாரணை செய்ததில் திருக்கோவிலூர், திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு, வேலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் கடந்த ஒரு மாதத்திற்குள் செயின் பறிப்பு செய்ததையும், பாண்டிச்சேரி லாஸ்பேட்டை ECR ரோட்டில் ஒரு பல்சர் NS-220 வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

 

மேற்படி நபரிடமிருந்து பல்சர் பைக், 09 கிராம் உருக்கிய நகையும், 21 கிராம் தங்க செயின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. உண்மை குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்ய உதவிய உட்கோட்ட குற்றப்பிரிவினரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.