Skip to main content

மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்த பரிசோதனை முடிவு... சிறுமியின் உறவினர்கள் உட்பட 4பேரை கைது செய்த போலீஸ்! 

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Police arrest 4, including relatives of girl

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது ஈச்சங்குப்பம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பிளஸ்-1 படித்து வரும் மாணவி ஒருவர் இவரது பெற்றோர் இறந்து விட்டதால் தன்னுடைய பெரியம்மாவின் ஆதரவில் படித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு வரை புதுச்சேரியில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஈச்சங்குப்பம் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்து பிளஸ் 1 வகுப்பில் படித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெரியம்மா குப்பு சிறுமியை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.

 

அங்கு சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதை அவரது பெரியம்மா குப்புவிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குப்பு உடனடியாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் சிறுமி கர்ப்பிணியானது தொடர்பாக தீவிர விசாரணை செய்தனர். அதில் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெரியம்மா, குப்புவின் மகன் 32 வயது மோகன், அதே கிராமத்தைச் சேர்ந்த 77வயது முதியவர் மண்ணாங்கட்டி என்கிற வெங்கடேசன், 28 வயது இளையராஜா ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

 

Police arrest 4, including relatives of girl

 

மேலும் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தில் மேலும் பலர் ஈடுபட்டு இருக்கலாம் என்ற தகவலையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார். காவல் அதிகாரிகள் பலரும் அடுத்தடுத்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதே போல் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியை போலீசார் விழுப்புரம் அரசு காப்பகத்தில் கொண்டு சென்று சேர்த்தனர்.

 

இந்த வழக்கு சம்பந்தமான விசாரணையை செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி உயரதிகாரிகள் மாற்றம் செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று காலை அவர் விழுப்புரம் காப்பகத்தில் இருந்த அந்த பள்ளி மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளார். அவரது விசாரணையை தொடர்ந்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட மோகன், மண்ணாங்கட்டி, இளையராஜா, மூவருடன் சேர்த்து பாபு , பிரபு, சத்யராஜ், ஏழுமலை, ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

விசாரணை முடிவில் மாணவியின் பாலியல் வழக்கில் எட்டுப்பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக மாணவியின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து யாருக்கும் தெரியாமல் மறைத்ததாக மாணவியின் பெரியம்மா குப்பு மீதும் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்துள்ளனர். இதனால் பள்ளி மாணவி பாலியல் வழக்கு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி பள்ளி மாணவியை ஈவு இரக்கமின்றி கொடுமை செய்த கும்பலில் அவரது உறவினரே சம்பந்தப்பட்டிருப்பது மேலும் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.