Skip to main content

பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் 

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

Petrol and diesel prices

 

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல்  விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது.

 

சென்னையில் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.100.94 காசுகளுக்கும் விற்பனையாகிறது. கடந்த 16 நாட்களில் பெட்ரோல் விலை ரூ 9.45 காசுகளும், டீசல் விலை ரூ.9.51 காசுகளும் அதிகரித்துள்ளது.

 

இது கடந்த 16 நாட்களில் 14ஆவது விலையேற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு- தமிழக நிதியமைச்சர் கேள்வி! 

Published on 22/05/2022 | Edited on 22/05/2022

 

Reduction in petrol and diesel prices - Tamil Nadu Finance Minister question!

 

எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசு தற்போது விலையைக் குறைக்க சொல்லி மாநிலங்களிடம் கேட்பது தான் கூட்டாட்சியா? என்று தமிழக நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த நிலையில், இந்தியா முழுவதும் எரிபொருட்கள் மீதான விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. 

 

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 2014- ஆம் ஆண்டில் இருந்து மத்திய அரசு எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல், பெட்ரோல் விலையை 23 ரூபாய், அதாவது 250 சதவீதமும், டீசல் விலையை 29 ரூபாய், அதாவது 900 சதவீதமும் உயர்த்தியுள்ளது. ஆனால் உயர்த்தியதில் இருந்து தற்போது அதில் 50 சதவீதத்தைக் குறைத்துவிட்டு, மாநிலங்களைக் குறைக்க சொல்லிக் கேட்கின்றனர். இதுதான் கூட்டாட்சியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

 

Next Story

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்... மாஜி எம்.எல்.ஏ உள்பட 45 பேர் மீது வழக்கு!

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

petrol, diesel price congress leader

 

கரோனா ஒரு பக்கம் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போது சத்தமில்லாமல் பெட்ரொல், டீசல் விலையை ஏற்றி மக்கள் வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். விலை ஏற்றத்தால் விலைவாசியும் ஏறிக் கொண்டிருக்கிறது. கரோனா முடக்கத்தால் வேலைகள் கூட இல்லாமல் செலவுக்கே வழியின்றி வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க கூட தவித்து வருகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களும் விலை ஏற்றம் மேலும் வதைக்கிறது.

 

இந்த நிலையில் தான் நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் நேற்று (29/06/2020) தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

புதுக்கோட்டை நகரில் மாவட்டத் தலைவர் தலைமையிலும், கீரமங்கலத்தில் முன்னாள் மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஷ்பராஜ் தலைமையில் தபால் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புதுக்கோட்டையில் 25 பேர்கள் மீதும் கீரமங்கலத்தில் 20 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதாவது அனுமதியின்றி கூட்டம் கூடியது, ஆர்ப்பாட்டம் செய்தது, கரோனாவைத் தடுக்கும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சமூக இடைவெளி இன்றி கூட்டமாக நின்றது என்பன உள்ளிட்ட பல காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும் போது.. மக்கள் பிரச்சணைக்காக போராடினால் கூட வழக்குப் போட்டு மிரட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தால் கூட வழக்கு என்பது ஏற்க முடியவில்லை என்றனர்.