Skip to main content

கட்சி பெயர், கொடி அறிவிப்பு? பேட்ட ஆடியோ ரிலீஸில் பட்டைய கிளப்பப்போகும் ரஜினி...!!!

Published on 08/12/2018 | Edited on 09/12/2018
Rajini Plan



சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'பேட்ட' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஞாயிறு மாலை 6.30 மணிக்கு சென்னை தாம்பரம் அடுத்த சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. 

 

இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது சன் டி.வி. இதனால் வேறு எந்த தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. 

 

இந்த நிகழ்ச்சியில் ரஜினி தனது கட்சி பெயரை அறிவித்து, கொடியை அறிமுகப்படுத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

தனது பிறந்த நாள் அன்று கட்சியின் பெயரை அறிவித்து, கொடியை அறிமுகப்படுத்த நினைத்திருந்த அவர் திடீரென அந்த முடிவை தள்ளி வைத்தார்.

 

இந்த நிலையில், சென்னை திருவான்மியூர் அடுத்த பாம்பன் சுவாமியின் ஆசிரமத்தைச் சேர்ந்த நாராயண ஐயங்கார் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களுடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். 


 

Rajini petta

 


அப்போது, ''9ஆம் தேதி நல்ல நாள். அன்றைய தினம் கட்சி பெயரை அறிவித்தால் நன்றாக இருக்கும். அடுத்த நாள் 10ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கும், நட்சத்திரத்துக்கும் அவ்வளவாக நன்றாக இல்லை. நீங்கள் விரும்பியப்படியே நியூமராலஜி பார்த்துவிட்டோம். ஆகையால் 9ஆம் தேதி அறிவித்தால் நன்றாக இருக்கும்'' என்று கூறியுள்ளனர். 

 

கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது, கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது, இந்த நிலையில் நம்ம நல்ல நேரம், பேட்ட ஆடியோ ரிலீஸ் பிரம்மாண்டமாக நடக்கிறது, இதிலேயே கட்சிப் பெயரை அறிவித்துவிடலாம் என்று ரஜினியின் முக்கிய ஆலோசகர்களும், குடும்பத்தினரும் வலியுறுத்தியுள்ளார்களாம்.

 

ஆடியோ ரிலீஸ்க்கு வீட்டிலிருந்து புறப்படும் முன்பு இந்த அறிவிப்பை வெளியிடுவாரா? ஞாயிறு மாலை 4.30 மணியில் இருந்து 6 மணி வரை ராகுகாலம் என்பதால், 6 மணிக்கு மேல் பிரமாண்ட விழாவில் கட்சிப் பெயரை அறிவிப்பாரா இல்லை டிசம்பர் 12 பிறந்த நாள் அன்றுதான் அறிவிப்பார் என்று ரசிகர்களிடையே பெரிய விவாதம் தொடங்கியிருக்கிறது... 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள்; புதிய சர்ச்சை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Chinese Names in Arunachal Pradesh; New controversy!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமைக் கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 வது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “மோடி செய்தது என்ன?. 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. ‘எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை’ என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை மோடி நியாயப்படுத்தினார். மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது” எனக் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.