Skip to main content

தமிழகத்தில் தடயவியல் பரிசோதனை துறையில் குறைந்த அளவு பணியாளர்கள் இருப்பது குறித்து  விளக்கமளிக்க உத்தரவு

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
m

 

தமிழகத்தில் தடயவியல் பரிசோதனை துறையில் குறைந்த அளவு பணியாளர்கள் இருப்பது குறித்து தமிழக உள்துறை செயலர்,தடயவியல் பரிசோதனை இயக்குனர் ஆகியோர் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அண்ணா நகர் பகுதியை சேர்ந்த குணசேகரன் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,  " எனது மகள் சரண்யாவிற்கும் ராஜா என்ற ரமேஷ் என்பவருக்கும் 31.08.2017 ல் திருமணம் நடந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட முதல் குழந்தை என மொத்தம் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதிக வரதட்சணை கேட்பது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ஆலங்குடி காவல் நிலையத்தில் குழந்தைகளை கணவர் ராஜாவிடம் காண்பிக்குமாறு உத்தரவிட்டார்.  இந்த உத்தரவின்படி 16.07 2017 அன்று குழந்தைகளை காண்பிக்க சென்ற சரண்யா வீடு திரும்பவில்லை. தனது மகளை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக எனது உறவினர் ஒருவர் எனக்கு தகவல் கூறினார்.

 

நான் எனது மகள் சரண்யாவை கண்டுபிக்க கோரி ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சரண்யாவை காணவில்லை என வழக்குபதிவு செய்தனர்.ஆனால் எனது மகள் சரண்யாவை ராஜா கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது.எனவே காணாமல் போன எனது மகளை கண்டுபிடித்து தரகோரி ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனு ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது ஆலங்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு ஒரு அடையாளம் தெரியாத பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பபட்டு, டி.என்.ஏ. சோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூறபட்டது. இதனையடுத்து தடயவியல் பரிசோதனை துறையில் அதிகளவில் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் தடயவியல் பரிசோதனை துறை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே தமிழக உள்துறை செயலர், தடயவியல் பரிசோதனை இயக்குனர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரர்களாக சேர்க்கிறது.

 

தடயவியல் பரிசோதனை துறையில் குறைந்த அளவில் பணியாளர்கள் இருப்பது தமிழக உள்துறை செயலர், தடயவியல் பரிசோதனை இயக்குனர் ஆகியோர் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கினை இரண்டு வார காலங்களுக்கு ஒத்திவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Holiday notification for Chennai High Court

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளர் எம்.ஜோதிராமன் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உட்பட்ட விளவங்கோடு தொகுதியின் இடைத்தேர்தல் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர் நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு அமர்வுகளுக்கும் விடுமுறை நாள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.