Skip to main content

"சசிகலா பற்றிய ஓ.பி.எஸ். கருத்து சரியே" - ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

"OPS opinion about Sasikala is correct" - JCD Prabhakar interview!

 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், "சசிகலாவை இணைப்பது பற்றி தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு என ஓ.பி.எஸ். கூறியது சரியே. தர்மயுத்தம் மூலம் இணையும்போது யாரையும் சேர்க்கக் கூடாது என சொன்னதை இப்போது ஒப்பிட முடியாது. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். இடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என நம்புகிறேன். எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு கருணாநிதி மட்டும் காரணம் இல்லை; உடன் இருந்தவர்களும்தான். 

 

அதிமுகவின்  எதிர்கால நலனைச் சிந்திக்கக்கூடிய தலைமைக் கழக நிர்வாகிகள் உரிய முடிவை எடுக்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் யாரும் சசிகலாவை அவரது சுற்றுப்பயணத்தில் சந்திக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.   

 

 

சார்ந்த செய்திகள்