Skip to main content

மர்மமான முறையில் முதியவர் மரணம்! 

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

 old man dies Mysterious

 

திருச்சி மாவட்ட தாத்தயங்கார்பேட்டை பகுதியில் உள்ள நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(60). இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதால், இவர் தனியாக வசித்து வருகிறார். 


இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மகன் மோகன்பாபு பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். இதனிடையே சரவணன் பொம்மநாயக்கர் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். இதுகுறித்து மோகன்பாபு தாத்தையங்கார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்