Skip to main content

மின் கட்டணத்தில் புதிய நடைமுறை! மின் நுகர்வோர்கள் கடும் அதிர்ச்சி! 

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

New practice in electricity tariff!

 

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாட்டிற்கான ரீடிங்கைக்  கணக்கிட்டு, அதற்குரிய தொகையை வசூலிக்கும் நடைமுறை இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரீடிங் எடுப்பதால், நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தச் சூழலில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் ரீடிங் எடுக்கும் நடைமுறையைக் கொண்டு வருவோம்” என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இதுகுறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை.

 

இந்த நிலையில், தற்போது கரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமாக பரவுவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 24ஆம் தேதிவரை அமலில் இருக்கும் ஊரடங்கை, மேலும் பல கட்டுப்பாடுகளுடன் நீட்டிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவர்கள் தெரிவித்துவருகிறார்கள். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்களுடன் நாளை (22.05.2021) ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.

 

இதற்கிடையே, கரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த மாதம் மின் கட்டணத்திற்கான ரீடிங் எடுக்கும் மின் பணியாளர்களை, ரீடிங் எடுக்க செல்ல வேண்டாம் என்றும், கடந்த 2019 மே மாதத்தில் எவ்வளவு தொகையை மின் கட்டணமாக மக்கள் செலுத்தினார்களோ அதையே இந்த மே மாதத்தில் கட்டுவதற்கேற்ப கட்டணத்தை மின் நுகர்வோர்களுக்கு அனுப்பி வைக்கலாம் என முடிவுசெய்து, மின் வாரியத்திற்கு இதுகுறித்த உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கிறது.


இதனையறிந்த சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மனுக்கு புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார் மின்சாரத் துறையின் ஊழல்களுக்கு எதிராக போராடிவரும் சமூக ஆர்வலர் சி. செல்வராஜ். அவரிடம் நாம் பேசியபோது, “தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில், மின்சார வாரியத்தின் சேர்மனுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உத்தரவில், 2019 மே மாதத்தில் என்ன மின் கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அதையே இந்த மாதத்திலும் வசூல் செய்யுங்கள் என்பதே அந்த உத்தரவின் சாரம்சம். கரோனா பரவல் அதிகரிப்பதால் அசஸ்மெண்ட் எடுப்பதில் சிரமம் இருக்கும் என்கிற காரணத்தை இதற்காக குறிப்பிடுகிறார்கள்.

 

மின்சார பணி என்பது அத்யாவசிய பணி என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. அப்படியானால் மின் பணியாளர்கள் அனைவரும் வேலைக்கு வர வேண்டும்; அவரவர்களுக்குரிய பணிகளைச் செய்ய வேண்டும் என்று அர்த்தம். இதில் செக்சன் ஆஃபிசர்களாக இருக்கக் கூடிய லைன்மேன்கள் பணிக்கு வர வேண்டும். அதே செக்சன் ஆஃபிசர் கேடரில் இருக்கும் அஸசர்கள் பணிக்கு வரத் தேவையில்லை என்றால் எப்படி? கரோனா தாக்குதல் பரவக்கூடாது என்றால் இரு தரப்புக்கும்தானே லீவ் கொடுக்க வேண்டும்? தெருத்தெருவாக அலைந்து மின் தடைகளை சரி செய்யும் லைன் மேன்கள் பணிக்கு வர வேண்டும்; வீடுகளுக்குச் சென்று மின் ரீடிங்கை எடுக்கும் கணக்காரளர்கள் (அஸசர்கள் ) வரத் தேவையில்லையாம்.

 

ஆக, கணக்காளர்கள் ரீடிங் எடுக்கத் தேவையில்லை என்பதால் 2019 மே மாதத்தில் வசூலித்த கட்டணத்தையே இந்த மாதத்திலும் வசூலிக்க ஆர்டர் பிறப்பிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. இதை எதிர்த்து, ஆணையத்தின் சேர்மனுக்கும், வாரியத்தின் சேர்மனுக்கும் புகார் அனுப்பினோம். இதனையடுத்து, இந்த மாதத்திற்கான ரீடிங்கை வீட்டில் இருப்பவர்களே ஃபோட்டோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைக்கலாம் என புதிதாக ஒரு ஆர்டரைப் பிறப்பிக்கிறார்கள். இதெல்லாம் பொது மக்களுக்கு சாத்தியமா ? 

 

கரோனா நெருக்கடி, ஊரடங்கு அமல் உள்ளிட்ட பிரச்சினைகளால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர், மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பிவரும் நிலையில், 2019 மே மாதம் கட்டிய கட்டணத்தையே இந்த மாதத்திற்கான கட்டணமாக வசூலிக்க ஆர்டர் போடுவது சட்டவிரோதம். ரீடிங்கை மக்களே ஃபோட்டோ எடுத்து அனுப்பச் சொல்வது அதைவிட மோசமானது” என்கிறார். 

 

பொதுமக்களிடமும் கொந்தளிப்பு உருவாகிவருகிறது. நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி என்பவர், “தாம்பரம் பகுதியில் கடந்த வருடம்தான் வாடகைக்கு குடியேறினேன்.  இந்த மாத மின் கட்டணமாக 2019 மே மாத கட்டணத்தையே மின் வாரியம் போட்டுள்ளது என வீட்டு உரிமையாளர் என்னிடம் சொல்கிறார். 2019இல் நான் உங்கள் வீட்டிற்கு குடியே வரவில்லை. 2019இல் எனக்கு முன்பிருந்தவர் அதிகமாக மின் கட்டணம் கட்டியிருக்கிறார். அதே கட்டணத்தை நான் எப்படி கட்ட முடியும்? இது லாஜிக்கே இல்லையே! என சொன்னால் வீட்டு உரிமையாளர் ஏற்க மறுக்கிறார். 2019இல் யாரோ பயன்படுத்திய கட்டணத்தை நான் எப்படிங்க என்னுடைய கட்டணமாக இந்த மாதத்தில் ஏற்க முடியும்?” என்று அரசுக்கு எதிராக கோபமாக வெடிக்கிறார் சத்தியமூர்த்தி.

 

மின்சார ஆணையத்தின் இத்தகைய உத்தரவுகளால் கோபமும் அதிர்ச்சியும் மக்களிடையே அதிகரித்துவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.