Skip to main content

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா!

Published on 08/12/2019 | Edited on 08/12/2019

உலக அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் சாதித்து வருகிறார்கள் தமிழர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு தடகளம் சாந்தி, சில மாதங்களுக்கு முன்பு கோமதி மாரிமுத்து. ஜூலையில் காமன்வெல்த்தில் 121 கிலோ பளுதூக்கி தங்கத்தோடு புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டடி என்ற சொந்த ஊருக்கு வந்தார் தங்க மங்கை அனுராதா. பளு தூக்கும் போட்டியில் தமிழ்நாட்டின் முதல் தங்கம் வென்ற பெண் என்ற சிறப்பையும் பெற்றிருந்தார். 

nepal south asian sports tamilnadu player anuradha win gold medal


எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது அதற்கான பயிற்சியை தொடங்க இருக்கிறேன். எனது வெற்றிக்கு எனது அண்ணன் மாரிமுத்து மற்றும் குடும்பத்தினர், துணையாக இருக்கும் காவல் உயர் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் என்று அப்போது சொன்னார். அனுராதா தஞ்சை தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார். 

nepal south asian sports tamilnadu player anuradha win gold medal

இந்த நிலையில் தான் கடந்த 1- ஆம் தேதியில் இருந்து நேபாளத்தில் நடக்கும் 13- வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவில் இருந்து அனைத்து பிரிவுகளிலும் வீரர்கள், வீராங்கனைகள் சென்று கலந்து கொண்டனர். 


அதில் பல போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களையும் வென்றுள்ளனர். இந்த நிலையில் தான் நேற்று (07.12.2019) நடந்த பளு தூக்கும் போட்டியில் 87 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அனுராதா தங்கம் வென்றார். காமன் வெல்த்தை தொடர்ந்து தெற்காசிய போட்டியிலும் அடுத்தடுத்து தங்கம் வென்றுள்ள உதவி ஆய்வாளர் அனுராதாவை காவல் உயர் அதிகாரிகளும், கிராம மக்களும் பாராட்டி வருகின்றனர்.

nepal south asian sports tamilnadu player anuradha win gold medal


கைப்பந்துப் போட்டியில் புதுக்கோட்டை கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெரோம் வினித் கேப்டனாக தலைமை ஏற்றி பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றார். அடுத்தும் புதுக்கோட்டை நெம்மேலிப்பட்டி அனுராதா தங்கம் வென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.