Skip to main content

சென்னை நீதிமன்றத்தில் நளினி நேரில் ஆஜர்!!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

 

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

 

 Nalini Appears in Chennai Court


மேலும் இவ்வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதாட அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில் ஜீலை 5-ம் தேதி நேரில் ஆஜராகலாம் என கடந்த 25-ம் தேதி நீதிபதி அனுமதியளித்தார். இதையடுத்து இன்று வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தற்போது ஆஜர்படுத்தப்பட்டார். 

 

 

 

சார்ந்த செய்திகள்