சேலத்தின் மைய பகுதியான சூரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக வீட்டில் திருட்டு தனமாக மதுபானம் விற்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து அங்கு வந்த போலீசார் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்யப்படும் வீடுகளை அடையாளம் காட்டினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் போலீசாரை கையோடு கூட்டி சென்று சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் வீடுகளை காட்டி கொடுத்தனர்.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை சாலையில் வீசி மக்கள் அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.