Skip to main content

‘சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது’ முதல் பிரதியை பெற்ற நக்கீரன் ஆசிரியர்! (படங்கள்) 

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

கரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த சென்னை புத்தகக் கண்காட்சியை கடந்த 16ஆம் தேதி மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். இந்தப் புத்தகக் கண்காட்சி வரும் மார்ச் மாதம் 6- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், இன்று எழுத்தாளர் ஆர்.விஜயசங்கர் எழுதிய ‘சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது’ எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. உயிர்மை பதிப்பகம் அரங்கில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புத்தகத்தை வெளியிட நக்கீரன் ஆசிரியர் புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் வரவேற்புரை வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்