Skip to main content

முடியாத முருகனின் போராட்டம் – உண்மை சோதனை நடத்த கவர்னருக்கு வேண்டுகோள்!!

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று பின்னர் தண்டனை குறைக்கப்பட்டவர்களாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட்பாயஸ், ஜெயக்குமார் என 7 பேர் வேலூர் மத்திய சிறை, புழல் சிறை, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 Murugan's struggle in prison.. request to the governor

 

இவர்கள், நாங்கள் அதிக ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டோம், இந்திராகாந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களே, முழு தண்டனையை அனுபவிக்காமல் வெளியில் வந்துவிட்டார்கள், நாங்கள் இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்துவிட்டோம், 3 வது ஆயுள் தண்டனையை அனுபவித்துவருகிறோம் என நீதிமன்றத்தின் கதவை தட்டினார்கள். உச்சநீதிமன்றம், இவர்கள் விடுதலை தொடர்பாக சம்மந்தப்பட்ட மாநில அரசே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துவிட்டது.

 

 Murugan's struggle in prison.. request to the governor

 

இதனை தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் நெருக்கடியால் கடந்த 2018 செப்டம்பர் 9ந்தேதி தமிழக அமைச்சரவை கூடி, 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் இயற்றி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பிவைத்தது. அவர் அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் வைத்துள்ளார்.

 

 

கவர்னர் முடிவு எடுக்க வேண்டும்மென தமிழகத்தில் உள்ள காங்கிரஸ், பாஜக உட்பட சில கட்சிகளை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியும் கடந்த 5 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காமல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனே முடிவு எடுக்க வேண்டும்மென முருகன், கடந்த வாரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். அவரது வழக்கறிஞர் புகழேந்தி வருகை தந்து சமாதானம் செய்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

 

 

இந்நிலையில் பிப்ரவரி 5ந்தேதி சிறையில் முருகனை சந்தித்துவிட்டு வந்த வழக்கறிஞர் புகழேந்தி, சிறைக்குள் கடந்த 4 நாட்களாக முருகன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார் என்கிற தகவலைச்சொன்னவர், வழக்கு தொடுத்தபோது சிபிஐ, நளினி, முருகன் இருவரிடமும் 3 மணி நேரம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளனர். இதனை நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். தற்போது எங்களை மீண்டும் உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்துங்கள், எங்களுக்கும் அந்த கொலைக்கும் சம்மந்தம்மில்லை எனக்கூறியுள்ளார். என்றவர் தங்களது விடுதலை தொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் என்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்துவருகிறார் என்றார்.

 

​உண்ணாவிரதம் இருப்பதை சிறைத்துறை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
West Bengal Governor insists on dismissing the minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.