Skip to main content

அம்பை அருகே பயங்கரம்... பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை!! ஆணவக்கொலையா போலீஸ் விசாரணை!!

Published on 20/11/2018 | Edited on 20/11/2018

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது  வெள்ளாங்குழி கிராமம். இங்குள்ளவர் சுடலை முத்துமணி இவரது மகன் இசக்கி சங்கர்(32). இவர் அருகே உள்ள களக்காடு மத்திய கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக வேலைபார்த்து வந்தார்.  வழக்கம் போல் இசக்கி சங்கர் இன்று காலையில் தனது கிராமத்தின் அருகே உள்ள ஆற்றில் குளிப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது ஒரு மர்ம கும்பல் ஒன்று அவரை விரட்டியது. அவர் அந்த கும்பலிடம்  சிக்கிக்கொண்டார் தப்பமுடியவில்லை. ஒருசில நொடிக்குள்  அந்தகும்பல் படுபயங்கரமாக அவரது கழுத்திலும், தலையிலும் வெட்டியது. இதன் காரணமாக இசக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரை வெட்டிய அந்த கும்பல் வந்த சுவடு தெரியாமலேயே தப்பியது. சம்பவ இடத்திற்கு வந்த அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது என்னவென்றால்,

murder

 

இசக்கி சங்கர் தனது வீட்டின் அருகே உள்ள மாற்று சமுதாயத்தை சார்ந்த ஒரு பெண்ணை இரண்டு வருடமாக காதலித்து வந்திருக்கிறார். இரண்டு பேரும் மனமொத்த காதலர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களின் காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே இவர்களின் ரகசிய சந்திப்பு பற்றி பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமான பெண்ணின் குடும்பத்தினர் இசக்கி சங்கரின் குடும்பத்தாரோடு வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்ததாம். அப்போதே சிலர் தலையிட்டு இவர்களுக்குள் சமாதானம் ஏற்படுத்தியதாக தெரிகிறது. மேலும் அந்த மத்தியஸ்தர்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி இரண்டு குடும்பத்தாரிடமும் பேசி ஒப்புக்கொள்ள வைத்தார்களாம். இதில் பெண்ணின் தந்தைக்கு உடன்பாடு இல்லையாம்.ஆனாலும்  இதற்கு அவர் ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த முடிவை பெண்ணின் உறவினர்கள் எதிர்த்ததாக சொல்லப்படுகிறது. காரணம் இந்த பெண்ணின் உறவினர் ஒருவர்  இந்த பெண்ணை திருமணம் முடிப்பதற்காக விரும்பியுள்ளாராம். இந்த நிலையில் இந்த பயங்கர கொலை இன்று காலை நடந்திருக்கிறது. விசாரணைக்காக போலீசார் அந்த பெண்ணின் தந்தையை காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் இந்த படுகொலை சம்பவம் ஆணவக்கொலை காரணமா அல்லது ஒருதலை காதல் காரணமா அல்லது  வேறு பகைமை காரணமா  என மூன்று கோணங்களில் விசாரணை நடப்பதாக தொடர்புடைய போலீசார்  தரப்பில் சொல்லப்படுகிறது.

 

murder

 

இதேபோல் கடந்த 18 ஆம் தேதி அன்று மேலப்பாலாமடை கிராமத்தில் பால்துரை என்ற வாலிபர் தலை துண்டாக வெட்டி எடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இன்று இன்று வாலிபர் இசக்கி சங்கர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த கொலைகளால் பீதி பற்றியிருக்கிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்