Skip to main content

மகனின் கழுத்தில் கால் வைத்து அழுத்தி கொலை செய்த தாய்!!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
The mother who put her foot on her son's neck..passed

 

திருவண்ணாமலை மாவட்டம் வேலூர் வட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். திலகவதி தனது மகனுடன் அரியூரில் உள்ள தனது சகோதரிகள் பாக்கியலட்சுமி, கவிதாவுடன் இருந்துள்ளார். 

 

ஜூன் 20ஆம் தேதி, மகனுக்குப் பேய் பிடித்துள்ளது, அதை ஓட்ட வேண்டுமென திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்குப் பூஜை செய்ய அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் வரமறுத்து கண்ணமங்களத்தில் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இரவு கண்ணமங்களம் பேருந்து நிலையத்தில் தங்கியுள்ளனர். 

 

இரவு தாய் மற்றும் சித்தி ஆகியோர் அந்தச் சிறுவனை அடி, அடி என அடித்துள்ளனர். அதோடு சிறுவனின் கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொலை செய்துள்ளனர். இறந்தபின், வலிப்பு நோயால் அந்தச் சிறுவன் இறந்துவிட்டான் என அழுதுள்ளனர். ஆனால் அக்கம்பக்க கடைக்காரர்கள், இதுகுறித்து போலீசுக்குத் தகவல் சொல்ல அங்கு வந்த கண்ணமங்களம் போலீசார், 3 பெண்களை அழைத்துச் சென்று விசாரித்தபோது, பூஜை செய்து பேய் ஓட்டுவதாக கூறி அடித்தது, காலால் அழுத்திக் கொலை செய்தது ஆகியவை தெரியவந்துள்ளது. அவர்களை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்