Skip to main content

பேருந்து நடத்துனரின் கைப்பையிலிருந்து பணம் கொள்ளை...பெண்ணாடம் போலீசார் விசாரணை

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

வேலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் அரசு பேருந்து நடத்துனரின் கைப்பையில் இருந்து பணத்தை கொள்ளையடித்த மூன்று இளைஞர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The money robbery from the bus conductor.. The police investigating the case

 

கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து பெண்ணாடம் நிறுத்தம் அருகே வந்தபோது நடத்துனர் மணிமாறன் படிக்கட்டின் அருகே நின்று பயணிகளை அழைத்துள்ளார். அப்போது பேருந்து நகரத் தொடங்கிய போது மூன்று இளைஞர்கள் அவரது கைப்பையை பிடுங்க முயற்சித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட மணிமாறன் பையின் மேல் பகுதியை பிடித்து இழுத்துள்ளார். அப்போது கொள்ளையர்களில் ஒருவன் கை பைக்குள் கையை விட்டு கையில் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளான்.

 

The money robbery from the bus conductor.. The police investigating the case

 

அவனைத் தொடர்ந்து மற்ற இருவரும் தப்பி ஓடியதால் இதுகுறித்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடத்துனரின் பையிலிருந்து 6 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்