Skip to main content

டாஸ்மாக் பணம் கொள்ளை ! புகார் கொடுத்த ஊழியர்களுக்கு போலீஸ் செம கவனிப்பு ! 

Published on 05/11/2018 | Edited on 05/11/2018
ta

 

திருச்சி தோகமலை மெயின்ரோட்டில் வாழை ஆராய்ச்சிமையம் அருகே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.  இந்த கடையில் முசிறியை சேர்ந்த திரவியம் என்பவர் சூப்பர் வைசராக வேலை செய்கிறார்.

 

முசிறியை சேர்ந்த தமிழரசன், கே.கள்ளக்குடியை சேர்ந்த மணிவேல் ஆகியோர் சேல்ஸ்மேனாகவும், குணசேகரன் என்பவர் உதவி சேல்ஸ்மேனாகவும் பணிபுரிகிறார். கடந்த சனிக்கிழமை திரவியம் விடுமுறை என்பதால் தமிழரசன், மணிவேல், குணசேகரன் ஆகியோர் டாஸ்மார்க் விற்பனையை முடித்து விட்டு கடையை பூட்டி 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாயை டூவிலரில் வைத்துக்கொண்டு திருச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். தாயனூர் வாழை ஆராய்ச்சி மையத்தை தாண்டி செல்லும் போது முகமூடி கொள்ளையர்கள் 6 பேர் டாஸ்மாக் ஊழியர்கள் சென்ற டூவிலரை மறித்தர். 

 

அப்போது அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார்கள். இது குறித்து சோமரசம் பேட்டை காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களிடம் சந்தேகப்படும் படி நபர்கள் இருந்தால் அடையாளம் காட்டுங்கள் என்று சொல்லியிருந்தனர். இதையடுத்து 2 பேரை சந்தேகப்படுகிறோம் என்று அடையாளம் காட்டினார். அடையாளம் காட்டப்பட்ட அந்த 2 பேரையும் அழைத்து வந்து போலிஸ் விசாரித்து பிறகு அனுப்பி வைத்தனர். போலிஸ் விசாரணை முடித்து வெளியே சென்ற அந்த நபர்கள் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டியிருக்கிறார்கள். 

 

இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அதனால் தயனூர் கடையிலிருந்து வேறு கடைக்கு மாற்ற டாஸ்மாக் மண்டல மேலாளருக்கு கோரிக்கை வைத்தனர். 

 

இந்த நிலையில் போலிசார் திடீர் என விசாரணைக்கு டாஸ்மாக் ஊழியர்களை அழைத்தனர். இதில் முதலில் போலிஸ்நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த மணிவேலை விசாரித்துவிட்டு கடைக்கு அனுப்பினார்கள். 

 

அதன் பிறகு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் தமிழரசன், குணசேகரன் ஆகியோரை போலிசார் விசாரணைக்கு உட்படுத்தி கடுமையாக தாக்கியிருக்கிறார்கள் இதில் காயம் அடைந்த இரண்டு பேரும் சிகிச்சைக்கா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

புகார் கொடுத்தவர்கள் மீது போலீஸில் சந்தேகப்பார்வை திரும்பியிருப்பது டாஸ்மாக் ஊழியர்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார். 

Next Story

பேருந்து நிலையத்தில் மது கடத்தல்; மூன்று பெண்கள் கைது

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Liquor smuggling at bus station; Three women were arrested

மதுபான பாட்டில்களை கடத்திய பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மூன்று பெண்கள் சந்தேகத்திற்கிடமாக மூன்று பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது  அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பார்த்த அப்பெண்கள் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் பிடித்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அந்த பைகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் முழுமையாக சோதனை செய்ததில் 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், சாராயமும் இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பெண்களையும் கைது செய்ததோடு, இந்த மதுபாட்டில் கடத்தல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகையில் மூன்று பெண்கள் பேருந்து நிலையம் வழியாக மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.