Skip to main content

தகுதி நீக்க வழக்கு: உங்களது எதிர்ப்புகளை சபாநாயகர் முன் தெரிவித்தீர்களா? நீதிபதி கிடுக்குப்பிடி கேள்வி

Published on 24/07/2018 | Edited on 24/07/2018


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி சத்தியநாராயணன் அமர்வில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் "18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அதிமுக கொறடா புகார் அளித்த போது, கட்சி முடக்கத்தில் இருந்தது. அதற்கு முன்னதாக முதல்வர் பழனிசாமியே சசிகலா அணியில் தான் இருந்தார்.

டிடிவி தரப்பின் மற்றுமொரு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் "ஆளுநர் முதல்வரை மாற்ற முடியாது என்பதும், எம்.எல்.ஏ-க்கள் தான் முதல்வரை முடிவு செய்கின்றனர் என்பதும் நன்கு அறிந்த ஒன்றாகும். எம்.எல்.ஏ.க்கள் என்ற முறையில் ஆளுநரை சந்தித்து மனு அளித்தது, முதல்வர் மீது நம்பிக்கை இல்லை, அதனால் முதல்வருக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப்பெறுவதாக கடிதம் கொடுத்தோம்.

எடியூரப்பா வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.-க்கள் செய்ததையே நாங்களும் செய்தோம். அவர்கள் செய்தது சரி என்றால், நாங்கள் செய்ததும் சரிதான். கட்சியின் அப்போதைய துணைப்பொதுச் செயலாளர் தினகரனின் அனுமதியோடு தான் கவர்னரை சந்தித்து முதல்வருக்கு எதிராக புகார் அளித்தோம். ஆனால் கர்னாடகாவில் நடந்ததை போல இங்கு எதிர்கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக கூறுவது தவறாகும். நாங்கள் முதல்வருக்கு எதிராக செயலட்டாலும், அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டோம்.

 

 

அப்போது நீதிபதி சத்தியநாராயணன்.... முதல்வருக்கு எதிராக புகார் அளிப்பது அரசுக்கு எதிராக அல்ல என கூறுகிறீர்களா??? என்றார்.

வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆமாம். எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்திக்க உரிமை உள்ளது.

மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் "சசிகலா சிறை சென்றபின் அணி மாறிய முதல்வர், அதன்பின்னர் பன்னீர் செல்வம் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தேர்தல் ஆணையத்தில் கட்சி விவகாரம் நிலுவையில் இருந்தபோது தகுதிநீக்க உத்தரவை சபாநாயகர் பிறப்பித்ததே தவறு. தேர்தல் ஆணைய முடிவு வரும் வரை காத்திருந்திருக்க வேண்டும். அதிமுக இல்லாத சமயத்தில், சபாநாயகரிடம் அளித்த புகாரில் அதிமுக கொறடா என்றே புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்... ஆளுனரிடம் அளித்த புகாரிலும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளனர் என்றார்.

அப்போது நீதிபதி சத்தியநாராயணன்..... உங்களது எதிர்ப்புகளை சபாநாயகர் முன் தெரிவித்தீர்களா? என கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் தனபால் தரப்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் " சபாநாயகரிடமும் தெரிவிக்கவில்லை. தலைமை நீதிபதி அமர்விலும் தெரிவிக்கவில்லை. அப்போது விவாதிக்கப்படாத விஷயத்தை இப்போது எழுப்ப முடியாது என்றார்.

இதையடுத்து, தகுதி நீக்க செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பு வாதங்கள் இன்று முடிந்தது. சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் நாளையும் வெள்ளிக்கிழமையும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.