Skip to main content

சைதாப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு (படங்கள்)

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

 

நிவர் புயல் காரணமாக சைதாப்பேட்டையில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து, நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார்.

நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையில் சென்னையில் ஆங்காங்கே நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. அதேபோல் தொடர்ச்சியாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து படிப்படியாக நீர் திறக்கப்பட்டிருந்தது. இதனால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், கரையோரம் உள்ள சைதாப்பேட்டையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார். அதேபோல் பல்வேறு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்