Skip to main content

கமல் கட்சி கருவிலேயே கலைக்கப்படவேண்டிய சப்பாணி குழந்தை-அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Published on 16/10/2018 | Edited on 16/10/2018

 

rajendra balaji

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திரபாலஜி பேசுகையில்,

 

எம்.ஜி.ஆர் மக்களோடு இருந்து மாளிகை கண்டவர் ஆனால் கமல் மாளிகையிலிருந்து மக்களை பார்ப்பவர். தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமலஹாசன் நாடகம் நடத்துகிறார். அந்த நாடகம் தேர்தலுக்கு ஒத்துவராது.

 

வெளிநாட்டு தீய சக்திகளோடு கமல் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் அவர் மீது ஏற்படுகிறது. நடிகர் கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்படவேண்டிய சப்பாணி குழந்தை. அது வளர்ந்தால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெரிய ஆபத்து ஏற்படும் என கூறினார்.

சார்ந்த செய்திகள்