Skip to main content

தூர்வாரியதாக கோடிக்கணக்கில் பணமும் அபேஸ்! இப்போ தண்ணீர் கொடுக்கவும் தண்ணீ காட்டுறாங்க! 

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

 

Sand robbery


 

காவிரியில் எதிர்பாராத விதமாக மழை, புயல் காரணமாக காவிரியில் அதிக அளவு தண்ணீர் விடப்பட்டு காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அது மக்களுக்கு பயன்படும் வகையில் காவிரியின் கிளை ஆறுகளில் தண்ணீர் திறந்து விடுவார்கள் என விவசாயிகள் பெரிதும் நம்பி இருந்தார்கள். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை தண்ணீர் திறந்து விடாமல் பெருமளவு கொள்ளிடத்தில் திறந்து விட்டதால் ஏற்கவே மணல் கொள்ளையினால் பாதிக்கப்பட்ட கொள்ளிடத்தின் முக்கிய பாலம் மதகுகள் உடைந்து விழுந்தது. இதன் பிறகாவது தண்ணீர் விடுவார்கள் என்று காத்திருந்த விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. 

 

இந்த நிலையில் கிளை ஆறுகள், ஏரிகளுக்கு தண்ணீர் இன்னும் வராத நிலையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டங்கள் அறிவிப்பு வெளியிட ஆரம்பித்தனர். இந்த நிலையிலும் திருச்சியில் அரியாற்று பகுதியில் உள்ள தமிழ்நாடு விவசாய சங்கம் சின்னதுரை மற்றும் சமூகநீதி பேரவை வழக்கறிஞர் ரவி தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3.10.2018 காலை 6 மணி முதல், அல்லித்துறை , புங்கனூர் இணைப்பு பாலம் கீழ் அரியாற்றில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். காவிரி கிளையாற்றில் தண்ணீர் விட சொல்லி போராட்டம் பண்ண ஆரம்பித்தனர். ஆனால் கடந்த 3 மணி நேரமாக நடைபெறும் போராட்டத்திற்கு பேச்சு வார்த்தைக்கு கூட அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது. .
 

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் சமூகநீதி பேரவை வழக்கறிஞர் ரவி நம்மிடம், திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு பாசன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் 17 ஏரிகள், புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் மூலம் பாசனம் பெறும் 36 ஏரிகள், அரியாறு வடிநில கோட்டத்தின் கீழ், மழைநீர் வரத்து பெறும் 7 ஏரிகள் என மொத்தம் 60 ஏரிகளில் ரூ.29.78 கோடி மதிப்பில் குடிமரமாத்து பணிகள் நடைபெற்றதாக அறிவித்தார்கள். 


இத்தோடு மேலும், 2018-19ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு நிதியின் மூலம் ஆறுப்பாதுகாப்பு கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பாசன வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள், வடிகால்களை புனரமைக்க ரூ.3.10 கோடியும், அரியாறு வடிநில கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஆதாரங்களில் 8 பணிகளை மேற்கொள்ள ரூ.76 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் பெற்றது என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் டி.பி.கணேஷன் சொல்லியிருந்தார்.
 

இவ்வளவு பணம் தூர்வாரி செலவு செய்தாக கணக்கு காண்பித்து விட்டு தற்போது தண்ணீர் விடாமல் இருப்பது எவ்வளவு துரோகம். மக்கள் பணத்தை இப்படி கொள்ளையடிக்கிறார்கள். அரியாற்றுக்கு தண்ணீர் விடவில்லை, புங்கனூர் ஏரிக்கு தண்ணீர் கேட்டோம் இதற்கு விடவில்லை. இப்படி விவசாயிகளை உயிரோடு சாவடிக்க நினைக்கிறார்கள் என்றார். தூர்வாரியதாக பணத்தையும் அபேஸ் பண்ணிட்டாங்க, இப்போ தண்ணீர் கொடுக்காம தண்ணீர் காட்டுறாங்க என கொதிப்போடு. பேசினார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Robbery in three shops in succession; police investigation

ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.