Skip to main content

தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட நுண்கடன் நிறுவனங்கள்; பதறும் கிராமப்புற மக்கள்.!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

Microfinance institutions that have been blown up rules by the Tamil Nadu government

 

தமிழக அரசின் உத்தரவுகளை மீறி கரோனா ஊரடங்கு காலத்திலும் சுய உதவிக்குழு நுண்கடன் நிறுவனங்கள், கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவுகிறது. கரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை வேகமெடுத்து பலதரபட்ட மக்களையும் நடுங்கச் செய்துள்ளது. புதிதாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினும் அதிரடியான அறிவிப்புகள் மூலம் மக்களைக் கரோனாவில் இருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். 

 

அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வங்கிகள், சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கியுள்ள நுண்கடன் நிறுவனங்கள் (மைக்ரோ ஃபைனான்ஸ்) வசூல் வேட்டையில் ஈடுபடக்கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேலையின்றி தினசரி வாழ்க்கையை நகர்த்தவே தடுமாறிவரும் சாமானிய மக்களின் நிலையை உணர்ந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கிவருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு நாகையில் ஊரடங்கு காலத்திலும் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர் நுண்கடன் நிறுவனங்கள். 

 

Microfinance institutions that have been blown up rules by the Tamil Nadu government

 

நாகை தியாகராஜபுரம் பகுதிக்கு இன்று (12.05.2021) காலை வந்த ‘கிராம விடியல்’ நிறுவன ஊழியர்கள், அப்பகுதி மக்களைப் பணம் கட்டச் சொல்லி நிர்பந்தம் செய்துள்ளனர். கரோனா விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல் அப்பகுதி மக்களை ஒன்றுகூட்டி குழு கூட்டம் நடத்தும் அந்த நிறுவன ஊழியரின் செயலை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் படம்பிடித்து வெளியிட்டுள்ளனர். இதேபோல நாகையை அடுத்துள்ள வெங்கிடாங்கால் பகுதியைச் சேர்ந்த தமிழ் என்பவரிடம் L&D சுய உதவிக்குழு நிறுவன ஊழியர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி காமராஜர் தெருவில் எக்விடாஸ் நுண்கடன் நிறுவன ஊழியர்கள் இன்று காலை வசூல் வேட்டையில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாழ்வாதாரம் இழந்து வீட்டில் உள்ள கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.