Skip to main content

ஆழ்கடலில் நீந்தும் முகக் கவசங்கள்... நீர்வாழ் உயிரினங்களுக்கு உலை!  

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Masks for swimming in the deep sea

 

கரோனாவிலிருந்து இருந்து மனித இனத்தின் உயிரைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகள் தற்பொழுது கழிவுகளாக நீர்வாழ் உயிரினங்களுக்கு உலை வைத்துள்ளது.

 

கரோனா பெருந்தொற்று பரவிய ஆரம்பத்திலிருந்து முகக் கவசம் அணிவதும், கைகளை முறையாகக் கழுவுவதும், தனிமனித இடைவெளியும் தான் தீர்வு எனத் தற்போது வரை அரசு சார்பிலும், மருத்துவர்கள் சார்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படி மனிதர்களை கரோனாவிலிருந்து காப்பாற்றிய கவசங்கள் கழிவுகளாக மாறி தற்போது ஆழ்கடலில் குவிந்து நீர்வாழ் உயிரினங்களின் உயிருக்கு வேட்டு வைத்துள்ளது.

 

புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஸ்கூபா டைவர் அரவிந்த் மற்றும் குழுவினர் வங்கக்கடலில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்காகச் சென்றபொழுது மனிதர்கள் பயன்படுத்திய முகக் கவசங்கள் ஆழ்கடலில் மிதப்பதைக் கண்டு அதிர்ந்தனர். அந்தக் குழு அது தொடர்பான காட்சிகளையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் தேங்கியிருக்கும் முகக் கவசங்களை அகற்றும் பணியிலும் அந்தக் குழுவினர் ஈடுபட்டனர்.

 

முறையாக முகக்கவசம் போன்ற மருத்துவக் கழிவுகளை நீக்காமல் போனதே இதற்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழும்பிவருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.