Skip to main content

வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்து செல்லப்படும் எந்திரங்கள்! (படங்கள்)

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை (19ஆம் தேதி) ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் எல்லாம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தலுக்காக வாக்குப் பதிவு எந்திரங்களையும் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில், திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோல், அரும்பாக்கம் கோள பெருமாள் பள்ளியிலிருந்து வாக்கு பெட்டிகள் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

 

 

சார்ந்த செய்திகள்