Skip to main content

காதல் ஜோடி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

 


கிருஷ்ணகிரியில், காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த இளம் காதல் ஜோடி, ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

 

l


கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த கார்கொண்டப்பள்ளி ரயில்வேகேட் அருகே உள்ள தண்டவாளப்பகுதியில் உடல்கள் சிதறிய நிலையில் ஆண், பெண் சடலங்கள் கிடந்தன. இதுகுறித்து ஓசூர் ரயில்வே காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. 


காவல்துறையினர் சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


விசாரணையில், இறந்து கிடந்தவர்கள் ஓசூரை அடுத்த பேரிகை அருகே உள்ள ராமசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த எல்லேஷ் (25), ஜோதி (21) என்பது தெரிய வந்தது. எல்லேஷ், லாரி ஓட்டுநராக இருந்துள்ளார். ஜோதி, பட்டப்படிப்பு முடித்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். மகளின் காதல் விவகாரத்தை அறிந்த ஜோதியின் பெற்றோர், லாரி ஓட்டுநராக உள்ள எல்லேஷூக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று மறுத்துள்ளனர். அதேநேரம், எல்லேஷின் பெற்றோர் மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். எனினும் ஜோதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், விரக்தி அடைந்த காதலர்கள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.


தற்கொலை முடிவெடுத்த அவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை அன்று (ஜூலை 21) இரவு மோட்டார் சைக்கிளில் கெலமங்கலம் வந்துள்ளனர். கார்கொண்டப்பள்ளி ரயில்வேகேட் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த வழியாக வந்த குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Next Story

மீண்டும் ஒரு ஆணவக்கொலை; சென்னையில் பயங்கரம்

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Again a manslaughter; Terrible in Chennai

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். சல்லடையான்பேட்டை பகுதியில் சர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்த திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து நேற்று இரவு அந்த பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பள்ளிக்கரணை போலீசார் நடத்திய விசாரணையில் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை அறிந்து கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.