தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27 ம் தேதி மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று (02.01.2020) தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் 10 வாக்குகள் மட்டுமே பெற்று வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 13 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்ற வேட்பாளர் ராஜேஸ்வரி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வானார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னிலை நிலவரம் (08.10 PM)
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி (335/515)
திமுக கூட்டணி: 163 முன்னிலை
அதிமுக கூட்டணி: 171 முன்னிலை
அமமுக: 1 முன்னிலை
ஒன்றிய கவுன்சிலர் பதவி (1836/5067)
திமுக கூட்டணி; 910 முன்னிலை
அதிமுக கூட்டணி: 784 முன்னிலை
அமமுக: 29 முன்னிலை
பிற கட்சிகள்- 113 முன்னிலை