Skip to main content

அமைச்சர் ஊரில் பெண் அதிகாரி களவாடிய தங்கநகை

Published on 11/07/2018 | Edited on 11/07/2018
gold

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில்  கயிலாயநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் செயல் அதிகாரியாக இருப்பவர் சசிகலா.

 

கடந்த 2017 பிப்ரவரி 16ந்தேதி கோயில் உண்டியல் சசிகலா, ஆய்வாளர் நடராஜன், பக்தர்கள் சங்க தலைவர் சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் உண்டியல் திறந்து எண்ணியுள்ளனர். உண்டியலில் அட்டிகை, கம்மல், மோதிரம், பிரேஸ்லெட் என 8 பவுன் தங்கநகை மற்றும் பணம் இருந்துள்ளது.

 

அதிகாரிகள் பணத்தை மட்டும் கணக்கேட்டில் கணக்கு எழுதிவிட்டு தங்கநகையை எழுதக்காணோம். இதுப்பற்றி பக்தர்கள் சபை கேள்வி கேட்டதும், அடுத்த முறை எழுதிவிடுகிறேன் என்றுள்ளார். அதன்பின் 3 முறை கோயில் உண்டியல் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவேட்டில் தங்கநகைகளை வரவு வைக்கவில்லை.

 

இதனால் அதிர்ச்சியானவர்கள் மண்டல அதிகாரிக்கு புகார் எழுதியுள்ளனர். விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலன் இதுக்குறித்து விசாரித்தபோது, எழுதிவிடுகிறேன் என்றவர் எழுதக்காணோம். கடந்த 6ந்தேதி வேறு ஒரு கோயில் ஆய்வுக்காக வந்த இணை ஆணையரிடம் மீண்டும் புகார் கூறியுள்ளனர்.

 


எழுதறது என் வேலையில்லை, கணக்காளர் வேலையென உயர்அதிகாரியிடம் நக்கலாக பதில் சொல்லியுள்ளார். இதில் கோபமான அவர் 9ந்தேதி விசாரணைக்கு விழுப்புரம் வரவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதையும் அந்த பெண் அதிகாரி மதிக்காததால் உயர் அதிகாரிகளே நொந்துப்போய்வுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.