Skip to main content

கொடைக்கானலில் போலி மது பாட்டில்களை சாலையில் கொட்டி மக்கள் போராட்டம்!

Published on 13/12/2018 | Edited on 13/12/2018
க்


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுலா தளமாக இருந்து வருகிறது.  இதனால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியின் இயற்கையை பார்த்து ரசித்துவிட்டு போய் வருகிறார்கள். இப்படி வரக்கூடிய சுற்றுலா பயணிகளில் பலர் கோடையில் விற்கக்கூடிய மதுபாட்டில்களை வாங்கி போதையில் மிதந்து விட்டும் செல்கிறார்கள். இதனால் கொடைக்கானல் நகர் மற்றும் பெருமாள் மலை பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இருந்தம் கூட மது பாட்டில்களை கள்ள சந்தையில் வாங்கி வந்து  பலர்  அங்கங்கே  சில்லிங் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள்.  அதன் அடிப்படையில் தான் கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள  பெருமாள் மலையில் கள்ளசந்தையில் வாங்கிய மதுபாட்டில்களை சில்லிங் மூலம்  விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டு இருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள 250க்கு மேற்பட்ட போலி மது பாட்டில்களை சமூக ஆர்வலரான பேத்துப்பாறை சேர்ந்த மகேந்திரன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அந்த மது பாட்டில்களை கைபற்றி அதை கொடைக்கானல் செல்லும் சாலையில் கொட்டி சாலையில் போராட்டத்தில் குதித்தனர்.

 

க்


 இதனால் திண்டுக்கல், பழனி போக்குவரத்து ஒருமணி நேரம்  பாதிக்கப்பட்டது.  இந்த தகவல் போலீசாருக்கு தெரியவே உடனே ஸ்பாட்டுக்கு விசிட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

 

இதுபற்றி சமூக ஆர்வலரான பேத்துப்பாரை மகேந்திரனிடம் கேட்டபோது...ஏற்கனவே பெருமாள் மலையில் டாஸ்மாக் கடை இருந்தது.  அதை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தான் எடுத்தனர்.  அப்படி இருக்கும் போது கொடைக்கானல் உள்பட சில இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை கள்ளசந்தையில் வாங்கி வந்து ஒரு குவாட்டர் பாட்டில் 200 ரூபாய்வரை  சில்லிங் போட்டு கடந்த சில மாதங்களாக விற்பனை செய்து வந்தனர். இதனால் பெரியவர்கள் முதல் இளைஞர்கள்  வரை  போதை பழக்கத்திற்கு அடிமையாகி வந்தனர்.

 

க்

 இந்த விஷயம் தெரிந்து நாங்களும் பல முறை போய் திருட்டு தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வருபவரிடம் இங்கு எல்லாம் சில்லிங் விற்க கூடாது என்று சொல்லியும் கூட தொடர்ந்து விற்பனை செய்து வந்தனர் இது பற்றி அதிகாரிகளிடம் சொல்லியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வந்தனர்.  அதனால்தான் இன்று அப்பகுதி மக்களை திரட்டி கள்ளச் சந்தையில் வாங்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை எடுத்து வந்து சாலையில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டதுடன் மட்டுமல்லாமல் அந்த கடையையும் அடித்து நொறுக்கி விட்டனர்.  அதுபோல் இனிமேல் இப்பகுதியில் சில்லிங்  மது பாட்டிகள் விற்ககூடாது. மீறி யாரும் விற்பனை செய்தால் அப்பகுதி மக்களை திரட்டி தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும்  குதிப்போம்  என்று கூறினார். இச் சம்பவம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடைக்கானலில் 'காட்டுத்தீ' - சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
'Forest Fire' in Kodaikanal Hill

கொடைக்கானலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக மலைப்பகுதிகளில் கோடைக்காலங்களில் காட்டுதீ ஏற்படும் நிலையில், சீதோஷ்ன நிலை மாற்றத்தின் காரணமாக தற்போதே காட்டுத்தீ ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக கொடைக்கானலில் ஒரு சில பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதிகள் மட்டுமல்லாது வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களிலும் தீயானது பரவி வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் பெருமாள் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இதனால், கிட்டத்தட்ட 50 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. தொடர்ந்து வனச்சரக பணியாளர்கள் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ தடுப்பு கோடுகள் இடப்பட்டுள்ளதால் விரைவில் தீ பரவல் கட்டுப்படுத்தப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர்வாசிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வரவேற்பை பெற்ற நிலையில் அதில் இடம்பெற்றுள்ள குணா குகையை பார்வையிட இந்த கோடையில் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அன்று தேனி, குரங்கணி பகுதியில் கொழுக்குமலை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில், ட்ரெக்கிங் சென்ற 23 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

கொடைக்கானல் மலைப்பாதையில் விபத்து; பயணிகள் காயம்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
incident on Kodaikanal Hill Pass Passenger issue

கொடைக்கானல் மலைப்பாதையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு செல்லக்கூடிய மலைப்பாதையில் அடிவாரத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் டம்டாம் பாறை என்ற இடம் உள்ளது. இங்கு கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி அதிவேகமாக டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது. அதே சமயம் வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில் டம்டாம் பாறை அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி பேருந்தில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்தின் முன்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாயமான பெண்ணை அங்குள்ள பொதுமக்கள் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.