Skip to main content

கட்காரியை சந்திப்பதில் என்ன பயன்? மோடிக்கு கர்நாடக தேர்தல்தான் முதன்மையாக தெரிகிறது: தமிமுன் அன்சாரி கண்டனம்

Published on 03/03/2018 | Edited on 03/03/2018


 

மோடிக்கு கர்நாடக மாநில தேர்தல் பிரச்சனைத்தான் முதன்மையாக தெரிகிறது என்று நாகை எம்எல்ஏவும், மஜகவின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க பிரதமர் நேரம் ஒதுக்காதது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் சந்தித்து பேசினர். 
 

இதுதொடர்பாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் குறித்தும் நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தமிமுன் அன்சாரி, 

modi


 

காவிரிக்காக பிரதமரை சந்திப்பது குறித்து முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்தித்துக்கொண்டதை பாராட்டுகிறேன். இந்த ஆரோக்கியமான அரசியல் போக்கு தொடர வேண்டும். 
 


முதல்வரை சந்தித்த பிறகு அண்ணன் ஜெயக்குமார், அண்ணன் ஸ்டாலின் ஆகியோர் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டிருப்பது குழப்பமாக இருந்தாலும் ஒரு விசயம் இருவரின் கருத்துக்களில் இருந்து புரிகிறது. அதாவது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாட்டு குழுவை சந்திக்க பிரதமர் மோடி விருப்பவில்லை என்பது தெளிவாகிறது. 
 

முதலில் நிதின்கட்கரியை சந்திக்குமாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக ஜெயக்குமார் கூறியிருக்கிறார். கடந்த வாரம் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது,  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழ்நாட்டுக்கு எதிரான கருத்தை நிதின் கட்கரி கூறி சென்றிருக்கிறார். அப்படிப்பட்டவரை சந்திப்பதில் என்ன பயன் இருக்கிறது?  

 

jayakumar THAMIMUN ANSARI


மொத்தத்தில் மத்திய பாஜக அரசும், பிரதமர் மோடியும் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் அவமதிக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது. மோடிக்கு கர்நாடக மாநில தேர்தல் பிரச்சனைத்தான் முதன்மையாக தெரிகிறது. அவருக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை. தமிழ்நாட்டின் காவிரி விவசாயிகள் மீதும் அக்கறை இல்லை.


 முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விசயத்தில் சமரசம் இல்லாமல் செயல்படுவார் என்று நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றம் கூடயிருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அதன் பிறகும் மோடி சந்திக்க மறுப்பாரேனால், மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆராய வேண்டும். இவ்வாறு நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டியின் போது  கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.