Skip to main content

மகாபாரத கதையை சொல்லி டிரைவருக்கு தேரோட்டியாக மாறிய கலெக்டர்

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
​   ​colector karur



கரூர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் கார் டிரைவராக பணியாற்றி வந்த பரமசிவம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. 
 

இதில் கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு பாராட்டி பேசியபோது, கடந்த 35 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்று செல்லும் பரமசிவத்தின் பணி உண்மையிலே மிகவும் பாராட்டப்பட வேண்டியது. எப்படி என்றால் மகாபாரதத்தில் கடவுள் கண்ண பிரானே அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து வழிநடத்தினாரோ? அப்படியே டிரைவராக அலுவலர்களை மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்கி பாதுகாப்பான பயணத்தை கொடுத்துள்ளார். 
 

சரியான நேரத்தில் சாலை விதிகளை மதித்து இரவு பகல் என பாராமல் பயணம் சிறப்பாக முடித்தார். அவ்வாறு உதவியாக இருந்த வாகன ஓட்டுநருக்கு இன்று ஒருநாள் நானே அவருக்கு ஓட்டுநராக இருந்து வழியனுப்பி வைக்கிறேன் என விழா முடிந்ததும் யாரும் எதிர்பாராத வகையில், பரமசிவத்தையும், அவரது மனைவியையும் தனது காரின் பின் இருக்கையில் அமர வைத்த கலெக்டர் அன்பழகன், திடீரென அவரே காரை ஓட்டிக் கொண்டு பரமசிவம் இல்லத்திற்கு அழைத்து சென்றார். இதைப் பார்த்த பொது மக்கள் ஆச்சரியமடைந்தனர். 

 

colector_Karur

 

பரமசிவம் வீட்டிற்கு சென்றதும் டீக்குடித்து விட்டு அவரது குடும்பத்தினருடன் கலெக்டர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் என்ன உதவிகள் வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என்று சொல்லிவிட் அங்கிருந்து புறப்பட்டார்.
 

இதேபோல் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி மூக்கணாங்குறிச்சியில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் பங்கேற்க சென்ற கலெக்டர் அன்பழகன், திடீரென சின்னமநாயக்கன்பட்டி கிராமத்திற்கு சென்றார்.
 

அங்கு வயது முதிர்வாலும், உடல் உழைப்பின்மையாலும் வறுமையில் வாடிய மூதாட்டி ராக்கம்மாள் (வயது 82) வசிக்கும் ஓலைக்குடிசை வீட்டிற்கு சென்றார். சற்றும் எதிர்பாராத மூதாட்டிக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தான் எடுத்து வந்த உணவை அவருக்கும் பரிமாறி, தானும் சாப்பிட்டார்.

 

karur


அத்துடன் மாதந்தோறும் கிடைக்கும் அரசின் உதவித் தொகையான ரூ.1000 வழங்குவதற்கான ஆணையையும் உடனடியாக வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனின் அடுத்தடுத்த மனிதநேயம் மிக்க செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
 

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரை எதிர்த்து மக்கள் வெகுவாக போராடி மக்கள் அரசியல்வாதிகள் மீது மக்கள் வெறுப்புணர்வு அதிகரித்து வரும் இந்த நேரத்தில் கரூர் கலெக்டரின் மனிதநேய செயல் பொதுமக்களுக்கு ஆறுதலான விசயமாக இருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.