Skip to main content

இலங்கையில் நடைபெற்றது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என ஐ.நா. அறிவிக்க வேண்டும்: ஜெனீவாவில் கருணாஸ் பேச்சு

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

இலங்கையில் நடைபெற்றது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்பதை ஐ.நா. பொதுசபை அறிவிக்க வேண்டும். சர்வதேச விசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கான ஒரேதீர்வு. பன்னாட்டு  விசாரணையும் பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வரவேண்டும். அதை காலம் கடத்தாது நிறைவேற்ற வேண்டும் என்று திருவாடானை எம்.எல்.ஏ.வும், நடிகருமான கருணாஸ் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. பொதுசபையில் வலியுறுத்தினார்.

 

ஜெனிவாவில் நடைபெற்ற 40வது ஐ.நா. கூட்ட தொடரில் கருணாஸ் கலந்து கொண்டார். 

 

அப்போது அவர், 

 

Kaunas

 

கடந்த 2009ஆம் ஆண்டில் உலகமே நினைத்து பார்க்காத வகையில் இலங்கையில் தமிழர்கள் மீது இனப்படுகொலை நடந்தேறியது. இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய சர்வதேச சமூகம், தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.  

 

 

 

நான் வாழும் தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் நீதிக்காக தொடர்ந்து உணர்வுமிக்கப் போராட்டங்களை நடத்துகிறோம்! புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களும் தொடர்ந்து போராடுகிறார்கள்! எங்களது உணர்வுகளுக்கு சர்வதேச சமூகம் செவிசாய்க்க வேண்டும்.

 

 

 

மறைந்த ஜெயலலிதா இலங்கை அரசுக்கு எதிராக 24.10.2013 - 12.11.2013 ஆகிய தேதிகளில் அவசர சட்டசபை கூட்டி காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்றும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டுமென்றும் இந்திய அரசிற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது. தொடர்ந்து நாங்கள் சட்டப் பேரவைக்குள்ளும், வெளியிலும் போராடுகிறோம்! ஆனால் இந்திய அரசு எங்கள் உணர்வை மதித்ததே இல்லை என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

 

இனப்படுகொலை நடந்தேறி 10 ஆண்டுகள் கடந்து விட்டன. இலங்கை சிங்கள அரசு நடத்தியது இனப்படுகொலைதான் என்பதற்கு பல வகைகளில், அடுக்கடுக்கான ஆதாரங்கள், நேரடி விசாரணைகள் – சாட்சிகள்  என அனைத்தும் அடுக்கி வைத்தப்பிறகும் நீதிக்கான விசாரணக்கு காலம் கடத்தும்  காரணமென்ன?

 

Kaunas

 

கடந்த காலங்களில் ஐ.நா.வின் மூவர் குழு அறிக்கை சாட்சியங்களோடு இலங்கையில் நடந்த இனப்படுகொலையை நிரூபித்தது. ஆனால் எங்கள் குருதி காய்வதற்குள் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில், இராஜபக்சே அரசுக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றி தமிழர்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியது.

 

 

 

2015 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலின் 30 ஆவது அமர்வில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் குறித்தும், போர்க் குற்றங்கள் குறித்தும் பன்னாட்டு நீதிபதிகளும் பங்கேற்கும் விதத்தில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும், நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் அந்த 30 ஆம் எண் தீர்மானம் கூறியது. ஆனால் இரண்டு நாள் கழித்து இலங்கையில் எந்த வெளிநாட்டு நீதிபதியையும் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா ஆணவத்தோடு அறிவித்தார். பன்னாட்டுச் சமூகம் இதற்கு பதிலுரைத்தது என்ன?! 

 

தொடர்ந்து ஈழத்தில் அமைதி நிலவுகிறதா? காணாமல் போனோரை மீட்டுத்தர சொல்லி தமிழ்ப் பெண்கள் வீதியில் போராடுகின்றனர். ஆனால் இன்னும் இராணுவம் வெளியேறவில்லை. மாறாக சிங்களக் குடியேற்ற நடக்கிறது.

 

 12 மாதத்தில் மனித உரிமை ஆணையர் இலங்கை குறித்து சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையை மேலும் 6 மாதம் தள்ளிப் போட்டது. 

 

18 மாதங்களுக்குப் பின்னர் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலின் 34ஆவது அமர்வில் 2017 மார்ச் 23 ஆம் தேதி ஈழத் தமிழருக்கான நீதியை ஆழக் குழிதோண்டிப் புதைத்து இனக்கொலை செய்த சிங்கள அரசுக்கு ஆதரவாக தீர்மானம் எண் 34 நிறைவேற்றப் பட்டுள்ளது. 36 நாடுகள் அத்தீர்மானத்துக்கு உடன்பட்டு முன்மொழிந்ததால், தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடாமலே நிறைவேற்றப்பட்டது.  கொலை செய்தவர்களையே நீதிபதியாக்கி நீதியை அழித்த இழிவான செயல் நடந்தேறியதை மறக்க இயலாது. 

 

Kaunas

 

ஐ.நா-வின் உள்ளக விசாரணை நீர்த்துப் போகச் செய்வதற்கான வேலைகளை பெரும் வலைப்பின்னல் அமைத்து  தொடர்ந்து தடுத்து வருகிறது இலங்கை அரசு. இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்து கொன்றொழித்த சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முற்படாமல், அவ்வரசுக்கு மீண்டுமொருமுறை வாய்ப்பு வழங்க ஐ.நா. மனித உரிமையில்  மன்றம் நினைப்பது ஏன்?

 

 

 

கடந்த 2015ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் முன்முயற்சியால் கொண்டுவரப் பட்ட தீர்மானத்தின்படி, சிங்கள அரசு தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளும் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமெனக் கோரியது. 2017ஆம் ஆண்டு வரை அது அமைக்கப்படவில்லை! எனவே, இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது! இப்போதும் அது அமைக்கப்படவில்லை! 

 

இப்போது, மீண்டும் இரண்டாண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் ஏன் வழங்க வேண்டும்.

 

 இந்திய அரசின் துணையோடு நடைபெற்று வரும் இந்தக் கால நீட்டிப்புகள், இலங்கையில் நடைபெற்று வரும் கட்டமைப்பு இன அழிப்புக்கு துணை செய்யும் நடவடிக்கையாகும்!

 

 

 

ஐ.நா.தீர்மானத்தில் கூறப்பட்ட ஏனைய விசயங்களில் பெயரளவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பெரும் முன்னேற்றங்களாக காண்பிப்பதும் ஐ.நா. மனித உரிமை மன்றம் வழங்கிய உறுதிப்பாட்டை நிறைவேற்றாமல் காலத்தை இழுத்தடிப்பதும் இலங்கை அரசின் நேர்மையற்ற பண்பையும் கபடத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.

 

 

அதனடிப்படையில்தான் இனப்படுகொலை புரிந்த  இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தல் அல்லது சர்வதேச சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயத்தை நிறுவுதலே பெருமளவில் பாதிக்கப்பட்டவர்களான தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான வழிமுறையாகும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்!

 

 

 

1.   இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படக் கூடாது.

 

 

 

2.   இலங்கை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு, அல்லது போர்க்குற்றப் புலன் விசாரணைக்கென்று இலங்கைக்காக அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

 

 

 

3.   போரினால் பாதிக்கப்பட்டோரின் துயரம் குறித்தும், ஏனைய சர்வதேச மனிதஉரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் இலங்கைக்காக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும்.

 

 

 

4.    இன அழிப்புச் சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும்!

 

இதுவே எங்களது பிரதான கோரிக்கையாகும்.

 

 வல்லரசுகளின் பூகோள அரசியல் வலைப்பின்னலுக்கு ஒரு இனம் பலியாக்கப்பட்ட அரசியலை மனிதம் காக்க நினைப்போர் மறக்கமாட்டார்கள் ஐநா பொதுசபை நீதிக்காக நிமிர வேண்டும் அது! தமிழருக்கான நீதியை ஐ.நா. உயர்த்திப் பிடிக்கும் என்று நம்புகிறோம்!

 

 

 

இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமை மீறலோ மட்டு மல்லாது  அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்பதை ஐ.நா. பொதுசபை அறிவிக்க வேண்டும். சர்வதேச விசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கான ஒரேதீர்வு. பன்னாட்டு  விசாரணையும் பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வரவேண்டும். அதை காலம் கடத்தாது நிறைவேற்ற வேண்டும்.

 

 

 

நீதிக்கான மனித நேயக்குரலை இந்த ஐ.நா. அறமன்றம் ஓங்கி உயர்த்தி இவ்வுலகுக்கு உரைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தினம் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பதே அவரின் திட்டம்'-கருணாஸ் பரப்புரை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'His plan is to lie 10 days a day' - Karunas lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவர் கருணாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், ''தமிழ்நாட்டுக்காரர்கள் கேனையர்கள் கிடையாது. மக்கள் மீது அதிகாரத்தை திணிப்பது தான் பாஜகவின் அரசியல். சமூக நீதி மறுப்பதுதான் சனாதனம். தமிழ்நாட்டில் சமூக நீதி என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ அதுதான் சனாதனம். ஆண்டாண்டு காலமாக கீழடியில் நமது வரலாற்றை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நம் தாய்மொழி தமிழ் மொழி திட்டமிட்டு பாஜகவால் அழிக்கப்படுகிறது. மக்களுக்கான எந்தச் செயலையும் செய்யாமல் தினமும் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பது பிரதமரின் செயல்பாடு அவருடைய திட்டம்'' என்றார்.

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.