Skip to main content

திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள்; நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்..! 

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

Reopen  school, colleges; District Collector who inspected in person

 

கரோனா தொற்று பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அரசின் தீவிர நடவடிக்கையால் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்த நிலையில் இன்று (1-ம் தேதி) பள்ளிகளில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

 

இதில் குமரி மாவட்டத்தில் 483 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பாடப்பிரிவு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதுபோல் கோணம் அரசு கலைக்கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.

 

Reopen  school, colleges; District Collector who inspected in person

 

பள்ளி மற்றும் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகளை வீடுகளிலிருந்து பெற்றோர்கள் வாழ்த்தி வழியனுப்பினார்கள். அதன் பிறகு உற்சாகமாகப் பள்ளி மற்றும் கல்லூரிக்குள் முகக் கவசம் அணிந்தபடி நுழைந்த மாணவ மாணவிகளை வாசலில் நின்ற ஆசிரியர்கள் பூக்கள் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். கல்வி நிலையத்துக்குள் நுழைந்த மாணவ மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கைகளைச் சுத்தப்படுத்த சானிடைசர் வழங்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டதற்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது.

 

Reopen  school, colleges; District Collector who inspected in person

 

மேலும் வகுப்புகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக ஒரு பெஞ்சில் இரண்டு பேர் மட்டும் உட்கார வைத்தனர். அதோடு மாணவர்களே தாங்களாகக் கொண்டு வந்த சானிடைசர் மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டனர். அதே போல் பள்ளிக்குள்ளேயும் வெளியேயும் கூட்டமாக இருக்காமல் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உறுதிசெய்யப்பட்டது. 

 

இந்த நிலையில் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நாகர்கோவில்  எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை ஆய்வு செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.