Skip to main content

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்தில் துாங்கிய போலீஸ்...! வாக்கி டாக்கியை தூக்கிச்சென்ற திருடர்கள்..!

Published on 18/10/2018 | Edited on 18/10/2018

காஞ்சிபுரம் பெருநகர போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரியும் சரவணன் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் (டிஎஸ்பி பட்டாலியன்) பிரவீன், அசேன் ஆகியோர் நேற்று முன்தினம் (15ம் தேதி) இரவு இருசக்கரவாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மானாம்பதி கூட் ரோட்டுக்கு வந்த அவர்கள் அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் நோக்கில் படுத்து தூங்கியுள்ளனர். கையில் இருந்த வாக்கிடாக்கியை எஸ்ஐ சரவணன் தனது தலைக்கு கீழ் வைத்துப்படுத்துள்ளார். இரவு 10 மணிக்கு தூங்கிய அவர்கள் நேற்று (16.10.2018) அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்த்துள்ளனர். அப்போது தலைக்கு அடியில் இருந்த வாக்கி டாக்கியை காணவில்லை. 

 

walkie talkie

 

யாரோ மர்ம நபர்கள் அதனை திருடிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மூவரும் இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு காஞ்சிபுரம் பெருநகர காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். அவர்கள் தூங்கியது இருட்டான பகுதி. அங்கு சிசிடிவி கேமராவும் இல்லை. இதனால் வாக்கிடாக்கியை தூக்கிச் சென்ற நபர் யார் என்பது குறித்து காஞ்சிபுரம் பெருநகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூங்கிய போலீசாருக்கு எஸ்பி சந்தோஷ் ஹாதிமானி செம டோஸ் விட்டுள்ளார். பணியின் போது தூங்கிய 3 போலீசார் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காஞ்சிபுரம் எஸ்பி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்