Skip to main content

எனது தாயை மீட்டுத் தாருங்கள் - ராமதாஸ்க்கு காடுவெட்டி குரு மகன் கோரிக்கை

Published on 12/11/2018 | Edited on 12/11/2018
Kaduvetti Guru - son



உறவினர்களிடம் இருந்து தனது தாயை மீட்டுத் தாருங்கள் என்று மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி வாட்ஸ் அப்புகளில் பரவி வருகிறது. 
 

வீடியோவில் கனலரசன், என்னோட அம்மா கையெழுத்திட்ட மாதிரி யாரோ ஒரு கடிதம் வெளியிட்டிருந்தார்கள். அந்த கடிதத்தில் இருப்பது பொய்யான செய்தி என்று நானும் கூறியிருந்தேன். 

 

Kaduvetti Guru - son


 

எங்க அப்பா இறந்ததில் இருந்து எங்க அம்மா ரொம்ப மனவருத்தத்தில் இருந்தார். எங்க அம்மாவுக்கு ஆறுதலாக இருக்கும் என நினைத்து அவுங்க பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். போன இடத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை. எங்க அம்மாவின் கால் உடைந்தது. விழுந்து காலை உடைத்துக்கொண்டாரா அல்லது உறவினர்கள் யாராவது தள்ளிவிட்டார்களா என்று இன்னமும் எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது. 
 

மருத்துவமனையில் இருந்ததில் இருந்து நான் எங்க அம்மாவை பார்க்க சென்றால், உறவினர்கள் உடன் இருந்து கொண்டு அம்மாவிடம் சரியாக பேசவிடவில்லை. ஒவ்வொரு முறையில் நான் அம்மாவிடம் செல்லும்போது, சரியாக பேசவிடுவதில்லை. அம்மா ஒரு பதட்டமாகவே காணப்பட்டார். 
 

தீபாவளிக்கு நான் அழைத்தப்போது கூட, நான் இப்போது வரும் நிலையில் இல்லை என்றார். ஊர் பெரியவர்களை வைத்து பேசி பார்த்தேன். அப்போதும் அவர் வரவில்லை என்று கூறிவிட்டார். 
 

கடந்த ஒரு வாரமாகவே எங்க அம்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்க அம்மாவுக்கு எழுத படிக்க தெரியாது. எங்க அம்மாவை எங்கு மிரட்டி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்க அம்மாவை அய்யாதான் கண்டுபிடித்து எங்கள் ஊர் காடுவெட்டியில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்ற தந்தை, மகனுக்கு நேர்ந்த சோகம்; இருவர் கைது

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

Tragedy befell the father and son who went to water the field

 

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்துள்ள அயன் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர்  பேச்சிமுத்து (வயது 55). இவரது மகன் வனராஜ் (வயது 28). விவசாயிகளான இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு மணிமுத்தாறு அருகே உள்ள விவசாய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

 

போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கால்வாய் தண்ணீரில் மர்ம நபர்கள் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக மின்வேலி வைத்த மதிவாணன், அலெக்ஸாண்டர் என்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

தந்தையை தடியால் தாக்கி கொலை செய்த மகன் கைது!! 

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Son arrested for beating father

 

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயது விவசாயி வரதராஜன். இவரது மனைவி 55 வயது ஜோதி. இவர்களுக்கு சாந்தி (37) என்ற மகளும், ராஜா (35) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் தனித்தனி வீடுகளில் வசித்துவருகின்றனர். இந்நிலையில், தந்தை வரதராஜுக்கும் மகன் ராஜாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்துவந்துள்ளது.

 

இதன் காரணமாக நேற்று (19.10.2021) மாலை தந்தை, மகன் இருவருக்குமிடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜா தனது தந்தை வரதராஜன் மீது தடி கொண்டு பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வரதராஜ் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து ராஜாவை கைது செய்துள்ளனர். பெற்ற தந்தையைக் கொலை செய்த மகனின் செயல் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.