Skip to main content

பெண்களை நிர்வாணப் படம் எடுத்து மிரட்டிய 3 பேர் கைது!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

salem district womens beauty parlour owner police


சேலத்தில் ஏழைப் பெண்களைக் குறிவைத்து நிர்வாணப் படம் எடுத்து மிரட்டியதாக அழகுநிலைய உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 


சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் 4- வது தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (35). இவர், வீட்டிலேயே அழகுநிலையம் நடத்தி வருகிறார். அவரிடம் வேலைக்கு வந்த இரண்டு பெண்களை, தன் மனைவியுடன் இணைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அவர்களைப் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார். 

தன்னுடைய நண்பர்களின் பாலியல் இச்சைக்கும் அவர்களைக் கட்டாயப்படுத்தி உள்ளார். நாளுக்குநாள் லோகநாதனிடம் இருந்து தொல்லைகள் அதிகமானதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து சேலம் நகர அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து லோகநாதன், அவருடைய மனைவி ரூபா ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, லோகநாதனை கைது செய்தனர்.
 

 


இது ஒருபுறம் இருக்க, மேலும் இரண்டு பெண்கள் லோகநாதன் மற்றும் அவருடைய நண்பர்களான தாதகாப்பட்டி வசந்த நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்கிற சிவா (36), பங்களா தோட்டம் பராசக்தி நகரைச் சேர்ந்த அஜய் என்கிற பிரதீப் (28) ஆகியோர் மீது புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில் மேற்கூறிய மூவரும் தங்களை ஆபாசப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியதாகக் கூறியிருந்தனர். இதையடுத்து அந்த வழக்கிலும் லோகநாதன் மட்டுமின்றி அவருடைய கூட்டாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதேநேரம், லோகநாதனின் மனைவி ரூபா தலைமறைவாகி விட்டதை அடுத்து, அவரை தேடி வருகின்றனர். காவல்துறை விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. 

லோகநாதன் வீட்டில் அழகுநிலையம் நடத்தி வருவதாகக்கூறி, பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் செய்து வந்துள்ளார். வெளி உலகுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அழகுநிலையம் நடத்துவதாகக் கூறி வந்துள்ளார். விபச்சாரத்திற்கு இணங்காத பெண்களை மிரட்டி, அவர்களை நிர்வாணமாகப் படம் எடுத்து வைத்துக்கொண்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். 
 

http://onelink.to/nknapp


குடும்ப கஷ்டத்தில் தவிக்கும் பெண்கள், கணவரைப் பிரிந்த மற்றும் கணவனை இழந்த இளம் பெண்களைக் குறிவைத்து லோகநாதனும் அவருடைய நண்பர்களும் நீண்ட காலமாகவே இவ்வாறு நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி வந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் அவர்களுடன் நிர்வாணமாக இருக்கும் காட்சிகளையும் ரகசியமாக வீடியோவில் பதிவு செய்துள்ள இவர்கள், மாநகரில் உள்ள சில பெரிய புள்ளிகளிடம் பணம் பறித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றத்திற்கு எல்லாம் லோகநாதனின் மனைவி ரூபா உடந்தையாக இருந்துள்ளார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் ஓமலூர் கிளைச்சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.