Skip to main content

வடலூரில் தைப்பூச விழா - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
v

 

கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூச விழாவையொட்டி சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் நடந்தது. இதில் லட்சக்கணக்காகன பத்கர்கள் பங்கேற்றனர்.

 

 இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் 6 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடக்கும். தைமாத பூசவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு 148வது தைப்பூச திருவிழா  20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதனை தொடந்து தருமசாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லாம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் காலை 10 மணிக்கு ஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

 

v

 

இதனை தொடர்ந்து  21 - ந்தேதி தைப்பூச  ஜோதி தரிசனம் நடந்தது. காலை 6 மணி,10 மணி, மதியம்1 மணி, இரவு10 மணி  ஆகிய காலங்களில் 7 திறைகள் நீக்கி  ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை என்று  கோசங்களுடன்  ஜோதி தரிசனத்தை கண்டுகளித்தனர். நாளை (22ம் தேதி) காலை 5.30 மணிக்கு ஜோதி காட்டப்படும்.

 

 நாளை மறுநாள் (23ம் தேதி) மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற இடத்தில் திருவறை தரிசனம் நடைபெறுகிறது.

 

v

 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர் .  டிஎஸ்பிக்கள் நெய்வேலி சரவணன், சேத்தியாத்தோப்பு ஜவஹர்லால், இன்ஸ்பெக்டர்கள் வடலூர் அம்பேத்கர்,புதுச்சத்திரம் அமுதா, சேத்தியாத்தோப்பு ராஜா மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. பல்வேறு இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது.

 

 இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலைய நிர்வாக அதிகாரி கருணாகரன் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர். விழாவையொட்டி மாவட்டத்தில் மது, மாமிசக்கடைகள் மூடப்பட்டிருந்தது. மாவட்ட நிர்வாகம் தைபூச திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறையை அறிவித்திருந்தது. இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வடலூர் தைப்பூச ஜோதி; பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தரிசனம்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Thaipusam Jyothi Darshan at Vadalur Sathya Gnana Sabha

ஜீவகாருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கானோர் வடலூருக்குத் திரண்டு வருவர். 

இந்த ஆண்டு  153 ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நேற்று (ஜன.24) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்பெருஞ்ஜோதி விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா இன்று (ஜன.25) நடைபெற்றது. இதில் முதல் தரிசனம் காலை 6 மணிக்கு நடைபெற்றது . இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனத்தை கண்டு வழிபட்டனர். தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை(ஜன.26) காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

விழாவைக் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை. மாவட்ட நிர்வாகம் மற்றும் தெய்வ நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளனர். சத்திய ஞான சபை வளாகப் பகுதியில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெறுகிறது. மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன கொடியேற்றம்; பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
nn


கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த, வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகள் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடைபெறும். அதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வடலூருக்குத் திரண்டு வருவர்.

நிகழாண்டு 153-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா இன்று  (ஜன.24) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. காலை 8 மணியளவில் தரும சாலை அருகே சன்மார்க்கக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மருதூரில் வள்ளலார் பிறந்த இல்லம், தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் சன்மார்க்க கொடியேற்றம் நடைபெற்றது. பார்வதிபுரம் பொதுமக்கள், வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட பல்லக்கை சுமந்து, பலவகைப் பழங்கள், சீர்வரிசைப் பொருட்களுடன் ஊர்வலமாக சத்திய ஞான சபை கொடிமரத்தின் அருகே வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள், "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' என்ற வள்ளலாரின் பாடலைப் பாடினர்.

பின்னர், வள்ளலாரின் கொடி பாடல்களைப் பாடியபடி சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து, அந்தப் பல்லக்கு சத்திய ஞான சபையை வலம் வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா நாளை (ஜன.25) நடைபெறுகிறது. முதல் தரிசனம் காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி,  நாளை மறுநாள் (ஜன.26) காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். விழாவைக் காணவரும் சன்மார்க்க அன்பர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை. மாவட்ட நிர்வாகம் மற்றும் தெய்வ நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளனர். சத்திய ஞான சபை வளாகப்பகுதியில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்றது. போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.